- Advertisement -
உலக கிரிக்கெட்

ஷாகிப் அல் ஹசன் கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை – என்ன பண்ணியிருக்காரு பாரு

ஷாகிப் அல் ஹசன் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுடன் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் மேட்ச் பிக்சிங் செய்ய அவரை இடைத்தரகர்கள் அனுப்பியுள்ளார்கள்.

அதேபோல 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது மேட்ச் பிக்சிங் செய்ய இடைத்தரகர்கள் அவரை அணுகி உள்ளனர். ஆனால் இவை இரண்டுமே அவர் ஐசிசி-க்கு தெரிவிக்கவில்லை. மேலும் இரண்டு முறையும் தன்னை இடைத்தரகர்கள் அணுகியபோது அவர் மௌனம் காத்தார் இந்த விடயம் தற்போது வெளிவந்துள்ளது.

- Advertisement -

எனவே ஐசிசியின் ஊழல் தடுப்பு நெறிமுறைகளை ஷகிப் அல் ஹசன் மீறி உள்ளார் என்பது தெளிவாகியுள்ளது. இதனால் ஐசிசி அவருக்கு இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்படுவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது எனினும் ஷகிப் அல் ஹசன் தன் தவறை ஒப்புக் கொண்டுள்ளார்.

தன் தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கூறியதால் அவர் தடை காலம் ஓராண்டாக குறைக்கப்பட்டு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தியா பங்களாதேஷ் தொடரில் ஷாகிப் அல் ஹசனுக்கு பதிலாக புதிய கேப்டன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -
Published by