நான் ஹாட்ரிக் எடுத்தா அது இந்த 3 இந்திய வீரர்களின் விக்கெட்டாக தான் இருக்கனும் – ஷாஹீன் அப்ரிடி விருப்பம்

Shaheen-Afridi
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சாஹீன் அப்ரிடி உலக கிரிக்கெட்டில் ஒரு வளர்ந்துவரும் வீரராக கருதப்படுகிறார். தற்போது வெறும் 21 வயது மட்டுமே நிரம்பியுள்ள இவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையான பாகிஸ்தான் அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார். கடந்த வருடம் 3 வகையான கிரிக்கெட்டிலும் பட்டையை கிளப்பிய இவரின் திறமையை பார்த்த ஐசிசி இவரை “2021ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்” என்ற மிகப்பெரிய விருதை கொடுத்து சமீபத்தில் கௌரவப்படுத்தியது. இதன் வாயிலாக சர் கேர்பீல்டு சொபேர்ஸ் ட்ராபி எனப்படும் இந்த விருதை வெல்லும் இளம் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

shaheen afridi

- Advertisement -

கலக்கும் ஷாஹீன் அப்ரிடி :
கடந்த வருடம் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 47 விக்கெட்டுகளை எடுத்த இவர் 2021ஆம் ஆண்டு காலண்டர் வருடத்தில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த 2வது பவுலராக இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு (54) பின் இடம் பிடித்தார்.

குறிப்பாக கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதன் வாயிலாக வரலாற்றிலேயே முதல் முறையாக உலகக்கோப்பையில் இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் புதிய சரித்திரம் படைத்தது. அந்த சரித்திர வெற்றிக்கு வித்திட்ட சாஹீன் அப்ரிடி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

Shaheen-afridi-1

ஹாட்ரிக் ஆசை:
இந்நிலையில் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்கள் என எடுத்தால் அது இந்தியாவை சேர்ந்த 3 தரமான வீரர்களை எடுக்க விரும்புவதாக சாஹீன் அப்ரிடி கூறியுள்ளார். இந்தியாவை சேர்ந்த உலகத்தரம் வாய்ந்த பேட்டர்களாக கருதப்படும் “ரோஹித் சர்மா”, “விராட் கோலி”, “கேஎல் ராகுல்” ஆகிய 3 வீரர்களின் விக்கெட்டை ஹாட்ரிக் விக்கெட்டுக்களாக எடுக்க விரும்புவதாக இஎஸ்பிஎன்க்ரிக்இன்போ இணையத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அத்துடன் தனது கிரிக்கெட் வாழ்நாளில் இதுவரை எடுத்த விக்கெட்களிலேயே கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நடந்த டி20 உலககோப்பை போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலியின் விக்கெட் வாழ்நாளில் மறக்க முடியாத பரிசான விக்கெட் எனவும் தெரிவித்துள்ளார்.

Shaheen-afridi

நடக்குமா :
இப்படிப்பட்ட அவரின் ஆசை நடக்குமா என யோசித்து பார்த்தால் நிச்சயம் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதே உண்மையாகும். ஏனெனில் 2021 டி20 உலகக்கோப்பை போட்டியில் அவர் மேற்கூறியுள்ள 3 இந்திய வீரர்களையும் ஏற்கனவே அவர் அவுட் செய்து காட்டியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக துணைக்கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை முதல் ஓவரிலேயே டக் அவுட் செய்த அவர் அதற்கு அடுத்த ஓவரிலேயே கேஎல் ராகுலை வெறும் 3 ரன்களுக்கு க்ளீன் போல்டாக்கினர். இதனால் ஏற்பட்ட சரிவிலிருந்து மீட்க போராடிய இந்திய கேப்டன் விராட் கோலியும் 57 ரன்கள் எடுத்திருந்தபோது சாஹீன் அப்ரிடி அவுட் செய்திருந்தார்.

இதையும் படிங்க : வெறும் 1 ஓட்டு வித்தியாசத்தில் மிகப்பெரிய கவுரவத்தை பெற்ற மிட்சல் ஸ்டார்க் – என்ன தெரியுமா?

மொத்தத்தில் இந்த 3 வீரர்களையும் ஹாட்ரிக் விக்கெட் எடுக்கும் திறமை அவரிடம் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. அடுத்ததாக வரும் அக்டோபர் 23ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை 2022 தொடரில் மெல்போர்ன் நகரில் பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் இந்தியாவை சந்திக்க உள்ளது. அந்த போட்டியில் இவர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுக்கக்கூடாது என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாக இருக்கும்.

Advertisement