தோனிதான் சச்சின் விக்கெட்டை கைப்பற்ற காரணம். அவருக்கு மட்டுமே இது தெரியும் – சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரர் புகழாரம்

Jakati
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வரை மூன்று முறை ஐபிஎல் கோப்பை தொடரை வென்றுள்ளது. முதன்முதலாக 2010ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதற்கு மிகப்பெரிய காரணமாக இருந்தவர் தோனி தான் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் சதாப் ஜகாடி கூறியுள்ளார்.

Jakati 2

- Advertisement -

2010 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணி மும்பை அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. அந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் அபாரமாக ஆடிக்கொண்டிருந்தார் . அரை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். அப்போது தோனி செய்த ஒரு ஸ்மார்ட்டான மூவ் சச்சின் டெண்டுல்கர் விக்கெட்டை வீழ்த்தியது என்று கூறியுள்ளார் சதாப் ஜகாடி

இதுகுறித்து நினைவுகளை பகிர்ந்து கொண்ட அவர் : நான் பந்துவீசி கொண்டிருந்தபோது மும்பை அணிக்கு எதிராக முதல் இரண்டு ஓவர்களில் 21 ரன்களை விட்டு விட்டேன். அப்போது மும்பையின் இடதுகை பேட்ஸ்மேன் அபிஷேக் நாயர் ஆடிக்கொண்டிருந்தார் .தோனி என்னிடம் வந்து நீங்கள் இப்போது பந்து வீச வேண்டாம், மும்பை அணியின் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு நீங்கள்தான் பந்து வீச வேண்டும். அதனால் இப்போது பேச வேண்டாம் என்று கூறினார்.

Sachin

அந்த போட்டியில் மும்பை அணி 169 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. 15வது ஓவரில் சச்சின் டெண்டுல்கர் அரைசதம் அடிக்கும் நிலையில் இருந்தார். மேலும் 6 ஓவர்களில் 74 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. நான் பந்து வீசிய போது முதல் பந்தில் சச்சின் டெண்டுல்கர் பவுண்டரி அடித்தார், அடுத்த பந்தில் தனது விக்கெட்டை இழந்தார்.

- Advertisement -

அதனை தாண்டி மேத்யூ ஹைடன் சரியான இடத்தில் ஒரு பந்திற்கு முன்னதாக நிற்க வைத்து கெரோன் பொல்லார்ட் விக்கெட்டையும் வீழ்த்தினர். இவர்கள் இருவரும் வலது கை பேட்ஸ்மேன்கள் என்னை சரியாக அந்த நேரத்தில் பயன்படுத்தினார் தோனி. எந்த பந்து வீச்சாளரை எப்போது அனுமதிக்க வேண்டும் எப்போது அனுமதிக்கக் கூடாது என்பதை இந்த நன்றாக அறிந்தவர் தோனி என்று கூறியுள்ளார் சதாப் ஜகாடி.

Jakati 1

தோனி குறித்து நாள்தோறும் ஒரு செய்தி வெளியாகி வரும் நிலையில் தற்போது சென்னை அணியை சேர்ந்த வீரரான ஜகாதி தற்போது தோனி குறித்த தனது அனுபவத்தினை பகிர்ந்துள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement