தென்னாபிரிக்க டெஸ்ட் அணியில் விளையாடும் தமிழக வீரர். யார் இவர் தெரியுமா ?- விவரம் இதோ

Muthusamy
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியில் தமிழகத்தை சேர்ந்த ஒரு வீரர் தற்போது விளையாடி வருகிறார்.

Muthusamy 2

- Advertisement -

பொதுவாக இந்தியாவைச் சேர்ந்த இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வீரர்கள் வெளிநாட்டு அணியில் விளையாடி உள்ளனர். அதில் குறிப்பாக முரளிதரன், ஆம்லா மற்றும் நாசர் ஹூசைன் போன்றோர் இந்தியாவில் பூர்வீகமாக கொண்டு வெளிநாட்டில் விளையாடி வந்தனர்.

இந்நிலையில் இன்று முதல் டெஸ்ட் போட்டியில் தென்ஆப்ரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளரான முத்துசாமி தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது பெற்றோர் தமிழகத்திலிருந்து தென்னாப்பிரிக்காவில் குடிபெயர்ந்தனர். அப்படி 1994 ஆம் ஆண்டு அங்கு முத்துசாமி பிறந்தார்.

அதன் பிறகு தென் ஆப்பிரிக்க அணியின் முதல் தரப் போட்டிகளில் விளையாடியவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என ஆல்-ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். உள்ளூர் அணியில் சிறப்பாக செயல்பட்ட அவர் அதன்மூலம் சிறப்பாக செயல்பட்டு தென் ஆப்பிரிக்க தேசிய அணியில் இடம் பிடித்து தற்போது இந்திய அணிக்கு எதிராக தனது அறிமுக போட்டியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement