சி.எஸ்.கே வீரர்கள் அரசாங்க ஊழியர்கள் போல நடந்துக்குறாங்க – குத்திக்காட்டி பேசிய சேவாக்

Sehwag
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 21 ஆவது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கணேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை குவித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக தொடக்க வீரர் ராகுல் திரிப்பாதி 51 பந்துகளில் 81 ரன்களை குவித்து அசத்தினார். சென்னை அணி சார்பாக பிராவோ 4 ஓவர்கள் வீசி 37 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி முதல் 12 வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க வீரர் வாட்சன் 50 ரன்களும் அம்பத்தி ராயுடு 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதுவரை சென்னை அணி வெற்றி பெறும் என்றே அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அதன் பிறகு வழக்கம்போல தோனி, சாம்கரன், கேதார் ஜாதவ் என அனைவரும் பேட்டிங்கில் சொதப்ப இறுதியில் ஜடேஜா 8 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார். இதனால் 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்களை இழந்து 157 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ராகுல் திரிப்பாதி தேர்வானார்.

Tripathi

இந்நிலையில் சென்னை அணியின் இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறுகையில்: 168 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்குதான். சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் மிக மோசமாக விளையாடினார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. என்னை பொறுத்தவரையில் சென்னை அணியில் சில வீரர்கள் அரசாங்க வேலை பார்ப்பவர்கள் போல் கடமைக்கு விளையாடி வருகிறார்கள் என்று தனது பாணியில் கிண்டலாகப் பேசியுள்ளார்.

out

சேவாக் குறிப்பிட்டது யாதெனில் : அரசு அரசு வேலை பார்ப்பவர்கள் என்றால் வேலை செய்யாவிட்டாலும் சம்பளம் சரியாக வந்துவிடும் என்பது போல அவர்கள் கடமைக்கு வந்து விளையாடி செல்கின்றனர் என்று சி.எஸ்.கே பேட்ஸ்மேன்களை அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement