இந்த 2 அணிகளில் ஒன்றுதான் ஐ.பி.எல் கோப்பையை தட்டி தூக்கும் – சேவாக் உறுதி

Sehwag
- Advertisement -

இந்தியாவில் துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக 29 போட்டிகள் முடிவடைந்த வேளையில் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது மீதமுள்ள 31 போட்டிகளும் இரண்டாவது கட்டமாக நான்கு மாதங்களுக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் யார் வெற்றி பெறுவார்கள் ? என்பது குறித்த கருத்துக்களை பல்வேறு முன்னாள் வீரர்களும் வழங்கி வருகின்றனர்.

Ganguly-ipl

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி துவக்க ஆட்டக்காரரான ஷேவாக் இந்த ஐபிஎல் தொடரை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்ல போவது யார் ? என்ற தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

ஐபிஎல் போட்டியில் இரண்டாவது கட்டப் போட்டிகள் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய மைதானங்களில் நடைபெறுவதால் டெல்லி மற்றும் மும்பை ஆகிய இரண்டு அணிகளுக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். அதிலும் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இம்முறை கோப்பையை கைப்பற்ற கூடுதலான வாய்ப்புகள் இருக்கிறது.

mi

ஏனெனில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் ஆடுகளங்கள் மெதுவாக இருக்கும் இதனால் சென்னை மற்றும் பெங்களூரு அணிக்கு கடுமையான சிக்கல் ஏற்படலாம் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்தியாவில் சென்னை அணி சிறப்பாக விளையாடி இருக்கலாம் ஆனால் இங்கு அதுபோன்று விளையாட முடியாது.

MIvsDC

எனவே இந்த ஐபிஎல் தொடரை கைப்பற்ற போகும் அணி எது என்று என்னிடம் கேட்டால் நிச்சயம் மும்பை இந்தியன்ஸ் என்றுதான் கூறுவேன். இனி வரும் தொடரில் ஏழு போட்டிகள் மீதமுள்ள நிலையில் நிச்சயம் அவர்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றும் அளவிற்கு அவர்கள் தகுதியானவர்கள் என சேவாக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement