ராயுடு மற்றும் டூபிளிஸ்சிஸ் நல்லா ஆடுனாங்க. ஆனா போட்டியை மாற்றியது இவர்தான் – சேவாக் பாராட்டு

sehwag
- Advertisement -

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டி நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சவுரப் திவாரி 42 ரன்கள் குவித்தார்.

csk-vs-mi

- Advertisement -

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி துவக்கத்தில் வாட்சன் (4), முரளிவிஜய் (1) என அடுத்தடுத்து ஆட்டமிழழந்து வெளியேற 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சி.எஸ்.கே தடுமாறியது. பின்னர் விளையாடிய டூப்ளெஸ்ஸிஸ் மற்றும் ராயுடு ஆகியோரின் அபார ஆட்டத்தால் சிறப்பான ரன்குவிப்பை வழங்கியது. ராயுடு 48 பந்துகளில் 71 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

டுபிளசிஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். இறுதியில் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை குவித்து வெற்றிபெற்றது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் சிஎஸ்கே ரசிகர்களை சற்றும் ஏமாற்றவில்லை.

Rayudu

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் இந்த சிறப்பான வெற்றிக்கு காரணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது :

ஐபிஎல் தொடர் சிறப்பாக தொடங்கி உள்ளது. ராயுடு மற்றும் டுபிளிஸ்சிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். கடைசி நேரத்தில் சாம் கரண் போட்டியை முற்றிலும் மாற்றி விட்டார் மீண்டும் ஒரு முறை வடாபாவை இட்லி வீழ்த்தி உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement