பச்சை நிற ஜெர்சி போட்டதாலதான் தோனி கோலியை தோக்கடிச்சாராம் – ஓ இதுக்கு பின்னாடி இப்படி ஒரு மேட்டர் இருக்கா ?

RcbvsCsk
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 44 ஆவது லீக் போட்டியில் நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்வதாக தீர்மானித்தார்.

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக விராட் கோலி 50 ரன்களும், டிவில்லியர்ஸ் 39 ரன்களையும் குவித்தனர். சென்னை அணி சார்பாக சாம் கரன் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் துவக்க வீரராக விளையாடிய ருதுராஜ் 51 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். கேப்டன் தோனியும் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ஒரு ஆறுதலான வெற்றியை அடைந்துள்ளது.

csk

இந்நிலையில் நேற்றைய போட்டியில் பெங்களூரு அணி பெற்ற தோல்வி குறித்து கிண்டலாக பல விஷயங்களைக் குறிப்பிட்டு இருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் பெங்களூரு அணி கோமா நிலையில் இருந்தது போன்று பேட்டிங் விளையாடியது என்று கூறியிருந்தார். அதே போன்று அவர் கூறிய இன்னொரு விடயத்தில் நேற்று பெங்களூர் அணி பச்சை நிற ஜெர்சியில் விளையாடியது குறித்தும் தனது கிண்டலான கருத்தை கூறியுள்ளார்.

Gaikwad 3

அதாவது தோனி பெங்களூரு அணியின் பச்சை நிற ஜெர்சியை பார்த்து அவர்கள் பாகிஸ்தான் அணி என நினைத்து தோனி அந்த அணியை அடித்து நொறுக்கி விட்டார். மேலும் அதனாலேயே வெற்றியும் பெற்றுக் கொடுத்தார் என்றும் தனது ஸ்டைலில் கிண்டலாக சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement