தோனியின் பிளானை வைத்தே தோனிக்கு ஸ்கெட்ச் போட்ட கார்த்திக் – பாராட்டி தள்ளிய சேவாக் மற்றும் ஜடேஜா

Karthik
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 21 ஆவது லீக் போட்டி நேற்று முன்தினம் அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கணேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை குவித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக தொடக்க வீரர் ராகுல் திரிப்பாதி 51 பந்துகளில் 81 ரன்களை குவித்து அசத்தினார். சென்னை அணி சார்பாக பிராவோ 4 ஓவர்கள் வீசி 37 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி முதல் 12 வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க வீரர் வாட்சன் 50 ரன்களும் அம்பத்தி ராயுடு 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதுவரை சென்னை அணி வெற்றி பெறும் என்றே அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அதன் பிறகு வழக்கம்போல தோனி, சாம்கரன், கேதார் ஜாதவ் என அனைவரும் பேட்டிங்கில் சொதப்ப இறுதியில் ஜடேஜா 8 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார். இதனால் 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்களை இழந்து 157 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ராகுல் திரிப்பாதி தேர்வானார்.

Tripathi

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக தினேஷ் கார்த்திக்கின் யூகங்கள் அனைத்தும் வெற்றிக்கு வழி வகுத்தன. மேலும் தோனி இத்தனை நாட்கள் எவ்வாறு ஒரு திட்டத்தை வகுத்து வெற்றிகளைப் பெற்று வந்தாரோ அதே போன்று திட்டத்தை அவருக்கு எதிராகவே செயல்படுத்தி தினேஷ் கார்த்திக் வெற்றி கண்டுள்ளார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் மற்றும் அதே ஜடேஜா ஆகியோர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து ஜடேஜா கூறுகையில் : சிஎஸ்கே அணிக்கு பெரிய இலக்குகளை சுலபமாக சேஸிங் செய்யும் வழக்கம் இருந்தது. ஆனால் இந்த ஆட்டத்தின் மூலம் அதனை உடைத்துள்ளார் தினேஷ் கார்த்திக். முதல் 10 வரை சுனில் நரைன் பயன்படுத்தாமல் பிற்பாதியில் சரியான நேரத்தில் கொண்டு வந்து சென்னை அணியை கூண்டோடு காலி செய்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Sehwag

மேலும் சேவாக் கூறுகையில் : ஆட்டத்தைப் பார்க்கும் போதே இது தினேஷ் கார்த்திக்கின் வியூகமாக இருக்குமோ எனச் சந்தேகித்தேன். நான் எதிர்பார்த்தது போலவே ஸ்பின்னர்களை இரண்டாம் பாதியில் கொண்டுவந்து சென்னை அணியை முற்றிலுமாக சிதைத்து விட்டார் என்று சேவாக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement