முதல் டெஸ்ட் : ஒரு பந்து கூட வீசப்படாமல் முடிவுக்கு வந்த இரண்டாவது நாள் ஆட்டம் – காரணம் இதுதான்

INDvsRSA
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது செஞ்சூரியன் மைதானத்தில் பாக்ஸிங் டே போட்டியாக நேற்று துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி தற்போது இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

rahul 1

- Advertisement -

அதன்படி நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்திருந்தது. துவக்க வீரர் ராகுல் 122 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

எனவே இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேலும் இந்திய அணி ரன்களை குவித்து பெரிய ரன் குவிப்பில் ஈடுபடும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் முழுவதும் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி முடிவுக்கு வந்தது. இதனால் மைதானத்தில் ரசிகர்கள் மட்டுமின்றி தொலைக்காட்சியில் பார்க்க காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கும் அது ஏமாற்றத்தை தந்தது.

mazhai

இன்றைய நாள் முழுவதுமாக மழை பெய்ததால் ஒரு ஓவர் கூட பந்துவீச வாய்ப்பு கிடைக்காமல் இரண்டாம் நாள் ஆட்டமானது முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னரே முதல் நாளே மழை வரும் என்று வானிலை அறிக்கை வெளியான பின்பு முதல் நாள் ஆட்டம் முழுமையாக நடைபெற்ற வேளையில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : தெ.ஆ ஒருநாள் தொடர் : 15 பேர் கொண்ட அணியில் தேர்வாகவுள்ள 2 சீனியர் வீரர்கள் – சூப்பர் செலக்சன்

ஆனால் தற்போது இரண்டாம் நாள் ஆட்டம் முழுவதும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அடுத்தடுத்த நாட்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. எனவே நிச்சயம் இந்த போட்டி இன்னும் ஒருநாள் பாதிக்கப்பட்டால் கூட போட்டி டிராவில் முடிவடையவே அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement