PAK vs RSA : மூன்று நிலையான இந்த பந்துவீச்சே வெற்றிக்கு காரணம் – சர்பிராஸ் பெருமிதம்

Sarfaraz
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 30 ஆவது போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சர்பிராஸ் அகமது தலைமையிலான ஒரு பாகிஸ்தான் அணியும், டூபிளிஸ்சிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின.

azam

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹாரிஸ் சோஹைல் 89 ரன்களும், பாபர் அசாம் 69 ரன்களும் குவித்தனர்.

பின்னர் 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 259 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணியை சேர்ந்த ஹாரிஸ் சோஹைல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

amir

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியதாவது : எங்கள் அணியின் பந்து வீச்சாளரான அமீர் துவக்க ஓவர்களில் விக்கெட்டுகள் எடுக்க அதே போன்று மிடில் ஓவர்களில் ஷதாப் விக்கெட்டுகளை எடுக்க பிறகு இறுதியில் வாஹப் ரியாஸ் விக்கெட்டுகளை எடுக்க இந்த போட்டியில் நாங்கள் அருமையாக வெற்றி பெற்றோம். இதே போன்று அனைத்து போட்டிகளும் எங்களது பந்து வீச்சாளர் சிறப்பாக செயல்படுவார்கள் என்று சர்பிராஸ் அகமது கூறினார்.

Advertisement