PAK vs RSA : வாய்ப்புக்கு காத்திருந்து இவர் ஆடிய ஆட்டமே எங்களுக்கு வெற்றியை பெற்று தந்தது – சர்பிராஸ் அகமது

உலகக் கோப்பை தொடரின் 30 ஆவது போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சர்பிராஸ் அகமது தலைமையிலான ஒரு பாகிஸ்தான் அணியும், டூபிளிஸ்சிஸ் தலைமை

Sarfaraz
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 30 ஆவது போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சர்பிராஸ் அகமது தலைமையிலான ஒரு பாகிஸ்தான் அணியும், டூபிளிஸ்சிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின.

pak vs rsa

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹாரிஸ் சோஹைல் 89 ரன்களும், பாபர் அசாம் 69 ரன்களும் குவித்தனர்.

பின்னர் 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 259 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணியை சேர்ந்த ஹாரிஸ் சோஹைல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

azam

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியதாவது : இது ஒரு முழுமையான அணியின் செயல்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த போட்டிக்கு முன்பு நாங்கள் எந்த மாறுதலும் செய்யவில்லை. ஆனால் இந்த போட்டியில் ஒரு மாறுதலை செய்தோம் இந்த மாறுதல் இன்று நன்றாக அமைந்தது.

amir

இந்த போட்டியில் புதிதாக ஹாரிஸ் சொஹைல் அணியில் சேர்த்தோம். அவர் வாய்ப்புக்காக காத்திருந்தது இன்று அந்த வேட்கையோடு ரன் குவித்தார். அவர் பேட்டிங் இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லரை போன்று இருந்தது. அவர் ஆடிய விதம் அணியை சிறப்பான பாதையில் கொண்டு சென்றது. நாங்கள் இன்னும் பீல்டிங்கில் அதிகம் உழைக்க வேண்டி உள்ளது. ஏனெனில் நிறைய கேட்சிகளை நாங்கள் தவற விட்டோம். இனி வரும் மூன்று போட்டிகளும் எங்கள் அணிக்கு முக்கியம் பந்துவீச்சு எங்கள் அணியில் சிறப்பாக உள்ளது என்று சர்பிராஸ் அகமது கூறினார்.

Advertisement