- Advertisement -
ஐ.பி.எல்

பெங்களூரு அணிக்கெதிரான வெற்றிக்கு காரணம் அவங்கதான்.. பாராட்டிய கேப்டன் – சஞ்சு சாம்சன்

அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அடுத்ததாக சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் போட்டியில் ராஜஸ்தான் அணி விளையாட இருக்கிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதனால் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணி துவக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : வாழ்க்கையும் கிரிக்கெட்டும் ஒன்றுதான் எப்பொழுதுமே சில நல்ல தருணங்களும் இருக்கும். சற்று மோசமான தருணமும் இருக்கும். அந்த வகையில் கடந்த சில போட்டிகளாகவே நாங்கள் அடைந்த தோல்வியிலிருந்து தற்போது மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது மகிழ்ச்சி.

- Advertisement -

இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் அனைவருமே பேட்டிங், பவுலிங் என சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக பந்துவீச்சாளர்களுக்கு நான் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். ஏனெனில் எதிரணியில் உள்ள சிறப்பான பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நல்ல முறையில் பந்துவீசி இந்த வெற்றியை பெற்று தந்துள்ளனர். எங்களது அணியில் பயிற்சியாளர்களான சங்ககாரா மற்றும் ஷேன் பாண்ட் ஆகியோர் நிச்சயம் வீரர்களுக்கு பெரிய அளவில் உதவுகிறார்கள்.

இதையும் படிங்க : ரொனால்டோ, மெஸி மாதிரி.. ஐபிஎல் கோப்பை ஜெயிக்கனும்ன்னா கோலி இதை செஞ்சாகனும்.. பீட்டர்சன் வெளிப்படை

அஸ்வின் மற்றும் ட்ரெண்ட் போல்ட் ஆகிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஒருபுறம் சிறப்பாக செயல்படும் வேளையில் ரியான் பராக், ஜெயஸ்வால் போன்ற இளம் வீரர்களும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறார்கள். அடுத்த போட்டியிலும் இதே போன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -