டெல்லி அணிக்கெதிரான இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்கு இவர்கள் 2 பேரே காரணம் – சாம்சன் பாராட்டு

Samson
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 7-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தெரிவு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே குவித்தது. துவக்க வீரராக ப்ரித்வி ஷா2 ரன்களிலும், தவான் 9 ரன்களிலும் ஆட்டம் இருந்து வெளியேற 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறியது.

pant

- Advertisement -

அதன்பின்னர் ரஹானே 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற அடுத்து பண்ட் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோர் இணைந்தனர். சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டாய்னிஸ் டக் ஆகி வெளியேற 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியது. அப்போது அணியை சரிவில் இருந்து மீட்ட ரிஷப் பண்ட் ஆகியோரது லலித் யாதவ் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 51 ரன்களை சேர்த்தது. சிறப்பாக விளையாடிய லலித் யாதவ் 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற ஒருபுறம் பண்ட் அதிரடியாக விளையாடி கொண்டிருந்தார்.

இறுதிவரை களத்தில் இருந்தால் பெரிய ரன்களை குவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ரிஷப் பண்ட் 51 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் டாம் கரன் 21 ரன்கள் மற்றும் கிறிஸ் வோக்ஸ் 15 ரன்கள் அடிக்க டெல்லி அணி தட்டுத்தடுமாறி 147 ரன்களை குவித்தது. அதன் பின்னர் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி துவக்கத்தில் பட்லர் 2 ரன்களிலும், வோரா 9 ரன்களிலும், சாம்சன் 4 ரன்களிலும், துபே இரண்டு ரன்களிலும் ஆட்டமிழக்க 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி தள்ளாடியது.

miller

பின்னர் மிடில் ஆர்டரில் டேவிட் மில்லர் மட்டும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். அவரும் 43 பந்துகளில் 62 ரன்களை குவித்து இருந்தபோது ஆட்டமிழந்து வெளியேற போட்டி டெல்லி அணிக்கு சாதகமாக மாறியது. ஆனால் இறுதி நேரத்தில் ராகுல் திவாதியா மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி ராஜஸ்தான் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். அதிலும் குறிப்பாக கிறிஸ் மோரிஸ் 18 பந்துகளை சந்தித்து 4 சிக்சர்களுடன் 36 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.

- Advertisement -

பின்னர் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன் கூறுகையில் : மில்லர் மற்றும் மோரிஸ் ஆகியோர் விளையாடும் போது எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. இருப்பினும் உண்மையை சொல்லப்போனால் இந்த போட்டி மிகவும் கடினமாக இருந்தது. பின்வரிசையில் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடி எங்கள் அணிக்கு வெற்றி வெற்றியை தேடித்தந்தது மகிழ்ச்சி. இந்த போட்டியில் நாங்கள் சரியான துவக்கத்தை தர தவறினாலும் மைதானத்தின் தன்மையை அறிந்து பின் வரிசையில் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள் அதிலும் குறிப்பாக மில்லர் மற்றும் மோரிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி எங்கள் அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளனர்.

morris

எங்கள் அணியின் 3 இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தது எதிர்பார்த்தது போலவே சிறப்பாக அமைந்தது. சர்க்காரியா வைப் பொறுத்தவரை அவர் எப்பொழுதும் நம்பிக்கையுடன் இருக்கிறார் அதனாலேயே அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறோம். இந்த போட்டியில் எங்களது அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு டெல்லி அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார்கள். அதேபோன்று பேட்ஸ்மேன்களும் இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர். மொத்தத்தில் இந்த போட்டியில் நாங்கள் பெற்ற வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது என சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement