போன வருஷம் வரைக்கும் இது நடக்கும்ன்னு நான் நெனச்சி கூட பாத்ததில்ல. ஆனா இந்த வருஷம் – சாம்சன் நெகிழ்ச்சி

samson
- Advertisement -

சென்ற ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஒரு மிகப்பெரிய மோசமான தொடராக அமைந்துவிட்டது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு கடைசி இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது தொடரை முடித்துக் கொண்டது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை இந்த ஆண்டு அதைத்தான் ராயல்ஸ் அணியில் தனது அணியில் இருந்து அதிரடியாக வெளியேற்றி விட்டது.

Smith

இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சஞ்சு சம்சன் புதிதாக தலைமை தாங்க உள்ளார். இந்நிலையில் தான் கேப்டன் ஆனது குறித்து சஞ்சு சாம்சன் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
19 வயதில் 2013 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் சஞ்சு சாம்சன் ஆவார். சென்ற ஆண்டு சரியாக விளையாடாத ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இந்த ஆண்டு மிகச் சிறப்பான வகையில் கட்டமைக்க ராஜஸ்தான் கிரிக்கெட் அணி திட்டம் தீட்டியது.

- Advertisement -

அதன் காரணமாக ஏலத்தில் சிறந்த வீரர்களை வாங்கியதோடு மட்டுமல்லாமல் இந்த ஆண்டு ராஜஸ்தான் அணியை தலைமை தாங்கும் பொறுப்பை இளம் வீரர் சஞ்சு சாம்சன் இடம் ஒப்படைத்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பேசிய சாம்சன் :

Smith

முதலில் ராஜஸ்தான் அணியின் ஓனர் மனோஜ் என்னிடம் தலைமை தாங்குமாறு விருப்பத்தை தெரிவித்தார். நானும் மகிழ்ச்சியுடன் தலைமைதாங்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். அந்த நிமிடம் வரை நான் ராஜஸ்தான் அணிக்காக கேப்டன் ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை என்று சாம்சன் கூறியுள்ளார்.

Samson

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குனராக ஸ்ரீலங்காவை சேர்ந்த ஜாம்பவான் வீரர் குமார் சங்ககாரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சங்ககாரா போன்ற ஒரு ஜாம்பவான் உயிரோடு இணைந்து விளையாடப் போவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று சந்தோஷம் சன் கூறியுள்ளார். மேலும் அவருடன் இணைந்து பல விஷயங்களை கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன் என்றும் சஞ்சு சம்சன் கூறியுள்ளார்.

Advertisement