என்னுடைய இந்த காட்டடிக்கு காரணம் இதுதான். இன்னும் நிறைய இருக்கு – ஆட்டநாயகன் சஞ்சு சாம்சன் பேட்டி

Samson 1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தோனி வழக்கம் போலவே முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 216 ரன்கள் குவித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 74 ரன்களில் (9 சிக்ஸர் 1 பவுண்டரி) , ஸ்டீவ் ஸ்மித் 47 பந்துகளில் 69 ரன்களும் (4 சிக்ஸர் 4 பவுண்டரி) குவித்தனர். அதற்கடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் டூபிளெஸ்ஸிஸ் தவிர மற்ற யாரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.

37 பந்துகளை சந்தித்த டூபிளெஸ்ஸிஸ் 7 சிக்சர் ஒரு பவுண்டரி என 72 ரன்கள் குவித்தார். துவக்க வீரர் வாட்சன் 33 ரன்களும், இறுதி நேரத்தில் அதிரடியாக 3 சிக்சர்களை விளாசிய தோனி 29 ரன்களும் குவித்தனர். இதனால் சென்னை அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

Samson

இந்நிலையில் இந்தப் போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : இன்றைக்கு என்னுடைய போட்டி திட்டம் நின்ற இடத்திலிருந்து அடிப்பது மட்டும் தான். என்னுடைய பலமிக்க ஏரியாவில் பந்து வந்தால் அதனை அடிப்பதை மட்டுமே நான் திட்டமாக வைத்திருந்தேன். மேலும் ஒரு பந்தை நாம் பலமாக அடிப்பதற்கு முன்னால் அது குறித்த தெளிவு இருக்க வேண்டும் இன்று நான் விளையாடிய விதம் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. மேலும் தொடர்ந்து நான் என்னுடைய பவரை அதிகரிக்க உணவு பழக்கவழக்கம், பயிற்சி என தீவிரமாக என் பலத்தை அதிகரித்து வருகிறேன்.

டி20 போட்டிகளில் பலமாக அடிக்க வேண்டும் ஏனெனில் தற்போது உள்ள நவீன கிரிக்கெட்டில் பவர் ஹிட்டிங் என்பது மிக முக்கியமான ஒன்று. இதற்காக கடந்த நான்கைந்து மாதங்களாக நான் என்னுடைய பலத்தை அதிகரித்து கொண்டே வருகிறேன். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. மேலும் எங்களது ரசிகர்களுக்கும் அது மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் அவர்களை இவ்வாறு தொடர்ந்து மகிழ்விக்க விரும்புகிறேன் என்று சஞ்சு சம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement