ஒரே ஆளா நின்னு அணியை காப்பாத்துறாரு இவரு நம்ம டீமுக்கு ரொம்ப அவசியம் – சஞ்சய் பாங்கர் கருத்து

Bangar
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த வேளையில் தற்போது தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான டெஸ்ட் கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தொடரில் எந்தெந்த வீரர்களுக்கு பிளேயிங் லெவனில் விளையாட இடம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உள்ளது.

IND

- Advertisement -

அந்த வகையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி ஒரு சதம் மற்றும் அரை சதம் என அறிமுக போட்டியிலேயே அசத்திய ஷ்ரேயாஸ் ஐயர் இந்த தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளையில் ஏற்கனவே இந்திய அணியில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விகாரி நியூஸிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்படாமல் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு இந்திய ஏ அணியுடன் சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்டார்.

இந்நிலையில் அணிக்கு திரும்பியுள்ள அவருக்கும் இத்தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக இந்த இருவரில் யாருக்கு மிடில் ஆர்டரில் வாய்ப்பு கிடைக்கும் என்று என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பேட்டி அளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் பங்கர் கூறுகையில் : ஷ்ரேயாஸ் ஐயரை விட விஹாரிக்கு தான் இந்த டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Vihari

ஷ்ரேயாஸ் ஐயர் தனது டெஸ்ட் கிரிக்கெட்டை சிறப்பாக ஆரம்பித்திருந்தாலும் விகாரியின் ஆட்டத்தை நாம் மறந்துவிடக்கூடாது. வெளிநாட்டு மைதானங்களில் அவரது ஆட்டம் மிக சிறப்பாக இருந்து வருகிறது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சதம் அடித்தது, ஆஸ்திரேலியா மண்ணில் அஸ்வின் உடன் இணைந்து போட்டியை டிரா செய்தது என முக்கியமான போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடிக்கவுள்ள 2 திறமையான வீரர்கள் – இடம் கிடைப்பது உறுதியாம்

அதுமட்டுமின்றி தனி ஒரு ஆளாக பெற்று இந்திய அணியை காப்பாற்றும் திறனுடைய விஹாரியை தான் இந்திய அணியில் விளையாட வைக்க வேண்டும் என சஞ்சய் பாங்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement