MS Dhoni : தோனி என்ன செய்தார். ஏன் அவர்மீது விமர்சனங்கள் எழுகின்றன என்பது புரியவில்லை – துணை பயிற்சியாளர்

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியை இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி பாகிஸ்தான்

Sanjay-Bangar
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியை இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி பாகிஸ்தான் ரசிகர்களும் ஆர்வத்துடன் கண்டனர்.

Dhoni

- Advertisement -

இந்த தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக தோனி மற்றும் ஜாதவின் பொறுமையான ஆட்டம் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணியின் துணை பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தோனியின் ஆட்டம் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : ஒரே ஒரு போட்டி தவிர இந்தத் தொடரில் மற்ற அனைத்து போட்டிகளிலும் தோனி சிறப்பாக செயல்பட்டுள்ளார். தென்னாபிரிக்க அணிக்கு எதிராக ரோகித் சர்மாவுடன் சேர்ந்து நன்றாக விளையாடினார். அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிரடியாக விளையாடினார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சவாலான ஆடுகளத்தில் அரைசதம் கடந்தார். அதேபோல இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோனி சிறப்பாக தான் விளையாடினார்.

Dhoni 1

ஆனால் இங்கிலாந்து அணியின் சிறப்பான சிறப்பான பந்துவீச்சினாலும் கடைசி நேரத்தில் மைதானத்தின் மந்த தன்மையினாலும் அவரால் அதிரடியாக ரன்களை குவிக்க முடியவில்லை. மேலும் இலக்கு அதிகமாக இருந்ததால் அடித்து ஆட வேண்டி இருந்த நிலையில் மைதானத்தில் தன்மையினால் தோனியால் அடிக்கமுடியவில்லை அணிக்காக விளையாடி வருகிறார் அப்படியிருந்தும் ஏன் அவர் மீது இதுபோன்ற விமர்சனங்கள் எழுகின்றன என்பது எனக்கு புரியவில்லை இது ஆச்சரியமாக உள்ளது என சஞ்சய் பாங்கர் தெரிவித்தார்.

Advertisement