பவருக்கு பஞ்சமில்லை.. இதை செஞ்சா ஒருநாள் தொடரில் இந்தியாவை வீழ்த்தலாம்.. இலங்கைக்கு ஜெயசூர்யா நம்பிக்கை

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த டி20 கிரிக்கெட் தொடரில் 3 – 0 (3) என்ற கணக்கில் இலங்கை சொந்த மண்ணில் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக 3வது போட்டியில் கடைசி 2 ஓவரில் வெறும் 9 ரன்கள் அடிக்க முடியாமல் இந்தியாவிடம் சூப்பர் ஓவரில் இலங்கை தோற்றது. அதனால் தற்சமயத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை அணி சொந்த நாட்டு ரசிகர்களிடமே கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை களமிறங்குகிறது. ஆகஸ்ட் இரண்டாம் தேதி துவங்கும் அந்தத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி, கேஎல் ராகுல் போன்ற நட்சத்திர வீரர்களுடன் இந்தியா களமிறங்குகிறது. எனவே ரோஹித் தலைமையிலான வலுவான இந்திய அணியை இலங்கை வீழ்த்துவது கடினமாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஜெயசூர்யா நம்பிக்கை:
இந்நிலையில் தங்களுடைய அணியில் திறமைக்கும் அதிரடியாக விளையாடும் பவருக்கும் பஞ்சமில்லை என்று இலங்கை பயிற்சியாளர் சனாத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். எனவே சூழ்நிலையை அறிந்து சிக்ஸர்களுக்கு பதிலாக பொறுப்புடன் செயல்பட்டு டபுள், ட்ரிபிள் ரன்களை எடுக்க வேண்டுமென அவர் தங்களது பேட்ஸ்மேன்களை அறிவுறுத்தியுள்ளார். அதை செய்தால் ஒருநாள் தொடரில் இந்தியாவை தங்கள் அணியால் தோற்கடிக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எங்கள் அணியில் அர்ப்பணிப்புக்கு பஞ்சம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர்கள் அழுத்தத்தை சிறப்பாக சமாளிக்க வேண்டும். அவர்களின் விழிப்புணர்வு கூர்மைப்படுத்தப்பட வேண்டும். பொறுப்புடன் விளையாடுவதில் இருந்து நீங்கள் விலகிச் செல்ல முடியாது. எனவே அதை நமது அணியினர் உணரும் வரை ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும்”

- Advertisement -

“பவர் ஹிட்ங்க் உங்களுக்கு அதிகம் வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் நீங்கள் போதுமான அளவுக்கு பவுண்டரிகள் மற்றும் டபுள் ரன்களை எடுத்தாலே நல்ல ஸ்கோர் குவிக்க முடியும். இலங்கையை மைதானங்கள் கொஞ்சம் பெரியதாக இருக்கிறது. எனவே உங்களால் டபுள் அல்லது ட்ரிபிள் அல்லது பவுண்டரிகளை அடிக்க முடியாது என்பதற்கான காரணமில்லை”

இதையும் படிங்க: எனக்கு அதுல சந்தேகமே இல்ல.. சஞ்சு சாம்சனின் இந்திய கேரியர் முடிந்ததா? தினேஷ் கார்த்திக் பேட்டி

“அதை நீங்கள் செய்தாலே அதிகமாக சிக்சர் அடிக்காமல் உங்களால் மிகப்பெரிய ரன்கள் எடுக்க முடியும். எங்களுடைய கேப்டன் அசலங்கா ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல வீரர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இருப்பினும் கேப்டன்ஷிப் பொறுப்பேற்கும் போது கொஞ்சம் அழுத்தம் ஏற்படும். நானும் அந்த இடத்தில் இருந்திருக்கிறேன். அந்த இடத்தில் அசத்துவதற்கு கொஞ்சம் நேரம் தேவைப்படும்” என்று கூறினார்.

Advertisement