அவரின் பயமற்ற பேட்டிங்கை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது – சாம் கரன் ஓபன் டாக்

Curran-2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 44 ஆவது லீக் போட்டியில் நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்வதாக தீர்மானித்தார்.

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக விராட் கோலி 50 ரன்களும், டிவில்லியர்ஸ் 39 ரன்களையும் குவித்தனர். சென்னை அணி சார்பாக சாம் கரன் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் துவக்க வீரராக விளையாடிய ருதுராஜ் 51 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். கேப்டன் தோனியும் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ஒரு ஆறுதலான வெற்றியை அடைந்துள்ளது.

csk

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய சென்னை அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரன் பேசுகையில் : இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெறவே முயற்சித்தோம். இந்த மைதானம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை போன்று இருந்தது. அதனால் வீரர்கள் தங்களது சொந்த மைதானத்தில் விளையாடுவது போல கருதி விளையாடினோம். ஸ்பின்னர்கள் இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசினார்கள்.

- Advertisement -

அதேபோன்று பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடினோம். நான் பந்துவீசும் போது ஆஃப் கட்டர்களை அதிகமாக வீச முயற்சித்தேன். ஏனெனில் இதுபோன்ற மைதானத்தில் ஸ்லோ பந்துகள் எடுபடும் என்று நினைத்தோம். இந்த விஷயம் சிறப்பாகவும் எனக்கு கை கொடுத்தது. மேலும் பேக் ஹேண்ட் ஸ்லோ பால்களை அதிகம் முயற்சித்தேன். ஏனெனில் என்னுடைய சகோதரர் டாம் கரன் அந்த பந்துகளை சிறப்பாக வீசுவார்.

gaikwad

இந்த போட்டியில் ருதுராஜின் பிரமாதமான பேட்டிங்கை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். இந்த போட்டியின் மூலம் அவர் நிச்சயம் தன்னம்பிக்கை பெற்று இருப்பார். அடுத்த சில போட்டிகளிலும் அவர் இதே போன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன். அவருக்கு இந்த போட்டியில் அதிக ரன்கள் இதுபோன்ற டாப் அணிக்கு எதிராக வரும் பொழுது மேலும் அவருக்கு தன்னம்பிக்கை அளிக்கும் என்றும் சாம் கரன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement