இந்த தொடரில் எனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு இது. அதனால் அடித்து நொறுக்கினேன் – சன் ரைசர்ஸ் வீரர் வெளிப்படை

- Advertisement -

ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.

SRHvsDC

அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வார்னர் 34 பந்துகளில் 66 ரன்களையும், சஹா 45 பந்துகளில் 87 ரன்கள் குவித்தனர். அதன் பின்னர் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 19 ஓவர்களில் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 36 ரன்களையும், ரஹானே 26 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக ரசித் கான் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகனாக விருத்திமான் சஹா தேர்வானார்.

Saha 2

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் விருதிமான் சஹா கூறுகையில் : இந்தப் போட்டியில் எனக்கு துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. இந்த வருடத்தில் நான் பெற்றுள்ள இரண்டாவது வாய்ப்பு இது. எனவே இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த நினைத்தேன். மேலும் அதனால் பவர்பிளே ஓவர்களிலேயே என்னுடைய அதிரடியை துவங்க நினைத்தேன். அதனால் முதல் பந்தில் இருந்து என்னால் அடிக்க முடியும் என்பதை உணர்ந்து அடிக்க ஆரம்பித்தேன்.

Saha 1

மைதானமும் என் பேட்டிங்கிற்கு நன்றாக உதவியது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் என்னை தேர்வு செய்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் இரண்டு போட்டிகள் சன்ரைசர்ஸ் அணிக்காக இதேபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தவும் நான் விரும்புகிறேன் என்று சஹா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement