மும்பை வான்கடே மைதானத்திற்கு பிறகு எனக்கு பிடிச்ச மைதானம் இதுதான் – சச்சின் டெண்டுல்கர் அளித்த பதில்

Sachin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடி பல்வேறு உலக சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார். கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் ஒரு நபராகவே இருந்து வருகிறார். அதோடு இன்றளவும் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் லெஜண்ட் கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறார்.

அதோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றிருந்தாலும் தொடர்ந்து கிரிக்கெட் தொடர்பான பணிகளை செய்து வரும் அவர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 16 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அண்மையில் மும்பை அணிக்காக அறிமுகமாகி இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள வேளையில் தற்போது மீண்டும் ரசிகர்கள் அதிகளவு சச்சின் பெயரை சமூக வலைதளத்தில் பேசி வருகின்றனர்.

அந்த வகையில் அண்மையில் சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு தொடர்ச்சியாக தனது பதிலை வெளிப்படையாக அளித்து வரும் சச்சின் டெண்டுல்கர் தற்போது ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலானது அனைவரது மத்தியிலும் வரவேற்பினை பெற்றதோடு அதிக அளவு பகிரப்பட்டும் வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : CSK vs SRH : 139 ரன்களை துரத்த தடுமாறிய சென்னை – ஒரு ஓவரில் மொத்த சேசிங்கையும் டேவோன் கான்வே மாற்றியது எப்படி

அந்த வகையில் ஒரு ரசிகர் சச்சின் டெண்டுல்கரிடம் உங்களுக்கு வான்கடே-விற்கு அடுத்ததாக பிடித்த மைதானம் எது என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சச்சின் : சேப்பாக்கம் தான் வான்கடே-க்கு அடுத்து எனக்கு பிடித்த மைதானம் என்ற பதிலை அவருக்கு ரிப்ளை செய்துள்ளார். சச்சின் அளித்துள்ள இந்த பதிலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement