நான் உங்கள் ஆட்டத்தை பார்க்க வரமாட்டேன்..! சச்சின் மனைவி அதிரடி முடிவு..! காரணம் என்ன தெரியுமா..?

- Advertisement -

கிரிக்கெட் உலகின் லிட்டில் மாஸ்டர், காட் ஆப் கிரிக்கெட், மாஸ்டர் பிளாஸ்டர் என்று பல புகழை கொண்டவர் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் உலகின் பரிணாமத்தை முழுவதுமாக மாற்றியமைத்தார். சச்சினின் ஆட்டத்தை காணவே பல ரசிகர்கள் மைதானத்தில் குவிவார்கள். ஆனால் அவரது மனைவி மட்டும் சச்சின் ஆடும் ஆட்டத்தை நேரில் பார்க்க செல்லமாட்டாராம் என்ன காரணம்?

sachin

- Advertisement -

பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளில் கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் அந்த போட்டிகளை நேரில் கண்டு அவர்களை ஊக்குவிப்பார்கள். மேலும் அவர்கள் ஆட்டத்தை கண்டுமகிழ்தும் வருவார்கள். ஆனால் சச்சின் டெண்டுல்கர் மனைவியான அஞ்சலி ஒரு சில மூட நம்பிக்கைகளால் சச்சின் ஆடும் ஆட்டத்தை காண நேரில் செல்ல மாட்டார்களாம். இந்த தகவலை சமீபத்தில் “பிரேக்பாஸ்ட் வித் சாம்பின்ஸ்” என்ற நிகழ்ச்சியில் சச்சின் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்த சச்சின் “அஞ்சலி, நான் விளையாடிய போட்டிகளை காண நேரில் காண விருப்பம் தெரிவித்தது இல்லை. அதற்கு காரணம் ஒருவேளை நான் ஆடும் போது மைதானத்தில் அவர்களை பார்த்தல், போட்டியிலிருந்து எனது கவனம் சிதறும் என்று அவர் கூறுவார். அதனால் நானும் அவரை வற்புறுத்தியது இல்லை “என்று தெரிவித்துள்ளார்.

sachin tendulkar

Sachin-Tendulkar-with-his-wife-and-children

மேலும், ஒரு சமயம் மற்ற கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் அஞ்சலிக்கு, மைதானத்தில் சச்சின் விளையாடும் போது அவரை காணாமல் இருக்க ஒரு யோசனையை அளித்துள்ளனர், அது என்னவென்றால் அஞ்சலியை யாருக்கும் தெரியாமல் மூடி மறைத்து போட்டியை நேரில் காண அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அந்த போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் பிரெட் லீ வீசிய முதல் பந்திலேயே சச்சின் அவுட் ஆகிவிட்டாராம். இதனால் அஞ்சலி சச்சின் ஆட்டமிழந்ததும் மைதானத்தில் இருந்து வேகமாக வெளியேறிவிட்டாராம்.

ஆனால் சச்சினின் மனைவி அஞ்சலி,சச்சின் விளையாடிய ஐ.பி.எல் போட்டிகளை பல முறை நேரில் சென்று கண்டிருக்கிறார் என்பது இங்கே குறிப்பிட படவேண்டிய விடயம்.

Advertisement