Worldcup : இந்த உலகக்கோப்பை தொடரில் மூவரும் ஜொலிப்பார்கள் – சச்சின் கணிப்பு

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் நேற்று பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள்

sachin
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் நேற்று பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Archer

- Advertisement -

இந்நிலையில் உலகக்கோப்பையில் ஜொலிக்கும் வீரர்கள் குறித்து இந்திய அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் சச்சின் கூறியதாவது : இந்த உலகக்கோப்பை தொடர் நிச்சயம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தும்.

இந்த தொடரில் அனைத்து அணிகளும் சமமாக மோதும். மேலும், இந்த தொடரில் வார்னர் ரன்களை அதிகமாக குவிப்பார் அதன் காரணம் ஐ.பி.எல் தொடரின் போது அவரது பார்ம் வெர்லெவலில் இருந்தது அதனால் இந்த உலகக்கோப்பை தொடரிலும் அவர் ஏராளமான ரன்களை குவிப்பார்.

warner2

மேலும், பந்துவீச்சில் ஆர்ச்சர் இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக செயல்படுவார் அதுமட்டுமில்லாமல் ரஷீத் கான் இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்காக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார். எனவே, எனது கணிப்பின்படி இவர்கள் மூவரும் இந்த தொடரில் மிகப்பெரிய வீரர்களாக ஜொலிப்பார்கள் என்று சச்சின் கூறினார்.

Advertisement