படுமோசமான விபத்தில் சிக்கிய சச்சினின் நெருங்கிய தோழி. காப்பாற்றிய காவலருக்காக – சச்சின் செய்த செயல்

Sachin-1
- Advertisement -

கடந்த சில நாட்களாகவே இந்திய கிரிக்கெட் அணி குறித்து வெளியாகும் செய்திகள் அனைத்தும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏனெனில் கேப்டன்சி மாற்றம், விராட் கோலி மற்றும் கங்குலி மோதல், அது குறித்த விவாதம் என பல்வேறு சூடான விடயங்கள் காரசாரமாக பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் இந்த விவகாரம் குறித்து எல்லாம் ஏன் பேசாமல் இருக்கிறார் என்று ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு அவர் அமைதியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் சச்சினின் இந்த அமைதிக்கு காரணம் என்ன என்று தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சச்சினின் நெருங்கிய தோழி ஒருவர் சாலை விபத்தில் சிக்கி இருக்கிறார். அப்படி விபத்தில் சிக்கிய அந்த தோழியை பணியில் இருந்த டிராபிக் போலீஸ் அதிகாரி ஒருவர் மீட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

- Advertisement -

முதுகுப் பகுதியில் காயம் அடைந்த அவரது தோழியை எவ்வித சிக்கலும் இல்லாமல் பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அந்த போலீஸ்காரர் அவரை காப்பாற்றி உள்ளார். இது குறித்த உருக்கமான பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ளார்.

அதில் தனது நெருங்கிய தோழியை தக்க நேரத்தில் காப்பாற்றிய அந்த காவல்துறை அதிகாரியை நேரில் அழைத்து நன்றி தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். அதோடு இது போன்ற மனிதர்கள் நம்மை சுற்றி இருப்பதனால்தான் நம் உலகம் இன்னும் அழகாக இருக்கிறது. உரிய நேரத்தில் உதவிய இந்த போலீசாருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இவரை மட்டும் இந்திய அணியில் இருந்து நீக்குனா அது நியாயமே இல்ல பாத்துக்கோங்க – ஆகாஷ் சோப்ரா பேட்டி

மேலும் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்த நினைத்து வேகமாக சென்று விபத்தில் சிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement