- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கொரோனா எதிரொலி : கங்குலியை தொடர்ந்து சச்சின் செய்த பெரிய உதவி – ரசிகர்கள் பாராட்டு

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக உலக நாடுகள் கடுமையாக போராடி வருகிறது. தற்போதுவரை 25 ஆயிரம் பேர் இதனால் உயிரிழந்துள்ளனர் . அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.

இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல பிரபலங்களும் கிரிக்கெட் வீரர்களும் அரசு ஊழியர்களும் தங்களால் முடிந்த உதவியை அரசாங்கத்திற்கு செய்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த வைரஸின் தாக்கத்தை எதிர்த்து போராடுவதற்கு காக்கும் மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் மக்களுக்கு உதவி செய்யவும் இந்த உதவித்தொகை பயன்படும். முன்னதாக பிசிசிஐ தலைவராக உள்ள சவுரவ் கங்குலி 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி மூட்டைகளை ஏழை மக்களுக்கு வழங்கியுள்ளார்.

இந்த 50 லட்சத்தை வைத்து ஏழை எளிய மக்களுக்கு ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பதாக கூறியுளாளார் சவுரவ் கங்குலி. ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாராளுமன்ற எம்.பி ஆன கம்பீர் மருத்துவ உபகரங்களுக்காக 50 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார்.

- Advertisement -

இவரை தொடர்ந்து இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார். அதில் 25 லட்சம் மகாராஷ்டிரா முதல்வர் நிவாரண நிதியாகவும், மற்றொரு 25 லட்சம் பிரதமர் நிர்வாண நிவாரண நிதியாகவும் வழங்கியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். இந்த தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் சிலரின் பொறுப்பற்ற செயல்களால் இந்த பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதே நிலைமை தொடருமாயின் இந்தியாவில் கொரோனா நிச்சயம் தனது ஆட்டத்தை பலமாக காண்பிக்கும்.

- Advertisement -
Published by