3 விதமான கிரிக்கெட்டிலும் அவர் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் – சபா கரீம் வேண்டுகோள்

Karim
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே இளம் வீரர்களின் மிகப்பெரிய கனவாக இருக்கும். ஆனாலும் இந்திய அணியில் உள்ள ஆரோக்கியமான போட்டி காரணமாக சில வீரர்கள் பல வருடங்கள் கழித்து வாய்ப்பினை பெறுவார்கள். ஆனால் வெகு சிலர் மட்டுமே விரைவாக இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடுவார்கள். அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோர் அணியில் பங்கேற்று விளையாடிய இளம் வீரரான ரவி பிஷ்நோய் தனது சிறப்பான செயல்பாட்டினால் அந்த தொடரிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

Ravi Bishnoi

- Advertisement -

அதன் பின்னர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக விளையாடி இருந்தார். இப்படி தான் பங்குபெற்ற அனைத்து போட்டிகளிலும் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதேபோன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியிலும் இவர் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். போதிய அனுபவம் இவருக்கு இல்லை என்ற காரணத்தினால் சாஹல் மற்றும் அஸ்வின் ஆகியோர் முதன்மை அணியிலும் இவர் ரிசர்வ் வீரராகவும் இடம் பெற்றுள்ளனர்.

bishnoi

இந்நிலையில் ரவி பிஷ்னோய்-யை டி20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாட வைக்காமல் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் விளையாட வைக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சபா கரீம் பேட்டி அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : ரவி பிஷ்னாய் போன்ற வீரர் 3 விதமான கிரிக்கெட் போட்டியிலும் விளையாடும் திறமை உடையவர். அந்த அளவிற்கு அவர் நிறைய திறமைகளை தன்னுள் வைத்துள்ளார்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட நாட்களாக லெக் ஸ்பின்னர் இல்லாமல் இருந்து வருகின்றனர். ஆனால் லெக் ஸ்பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தேவைப்படுவர். நிச்சயம் ரவி பிஷ்னாயை அந்த வகையில் இந்திய டெஸ்ட் அணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அணியில் இடம் பெற்ற சில மாதங்களிலேயே அனைவரது கவனத்தையும் இவர் ஈர்த்து இருக்கிறார்.

இதையும் படிங்க : ஐசிசி டி20 உ.கோ 2022 தொடருக்கு பின் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விலக செய்ய வாய்ப்புள்ள 5 வீரர்கள்

நாளுக்கு நாள் அவருடைய திறன் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்திய அணியில் பல ஸ்பின்னர்கள் இருந்தாலும் இவர் ஒரு இளம் வீரர் என்பதனால் இவருக்கான நேரத்தை கொடுத்து அவருக்கு வாய்ப்புகளை வழங்கும் வேளையில் இந்திய அணியின் அடுத்த நட்சத்திர வீரராக இவர் மாறவும் வாய்ப்பு உள்ளதாக சபா கரீம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement