13 ஆண்டு வரலாற்றில் எந்த ஜாம்பவானும் படைக்காத சாதனையை அசால்டாக படைத்த ருதுராஜ் கெய்க்வாட் – விவரம் இதோ

Ruturaj
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 53 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

Dhoni

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக இளம் வீரர் தீபக் ஹூடா 30 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள் என 62 ரன்களையும், கேஎல் ராகுல் 29 ரன்களும் குவித்தனர். சென்னை அணி சார்பாக லுங்கி நெகிடி சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 39 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 154 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக துவக்க வீரர் கெய்க்வாட் 49 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சர் என 62 ரன்களையும், டு பிளிசிஸ் 34 பந்துகளில் 48 ரன்களையும், அம்பத்தி ராயுடு 30 பந்துகளில் 30 ரன்களும் குவித்தனர். ஆட்டநாயகனாக ருத்ராஜ் கெய்க்வாட் தேர்வானார்.

ngidi

இந்நிலையில் நேற்றைய போட்டியின் மூலம் ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியில் யாரும் படைக்காத ஒரு சிறப்பான சாதனையை படைத்துள்ளார். அதாவது இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் சிஎஸ்கே அணியில் எந்த ஒரு வீரரும் தொடர்ச்சியாக மூன்று அரை சதம் அடிக்கவில்லை. அதுமட்டுமின்றி 3 போட்டிகளில் தொடர்ந்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றது இல்லை.

ruturaj 1

ஆனால் நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்து மட்டுமின்றி ஆட்டநாயகன் விருது பெற்ற கெய்க்வாட் தொடர்ந்து மூன்று அரை சதம் அடித்தது மட்டுமின்றி மூன்று முறை ஆட்டநாயகன் விருதை பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை சிஎஸ்கே அணியில் வேறு யாரும் படைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement