இன்னும் 19 ரன்கள் போதும்.. விராட் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – ருதுராஜ் கெய்க்வாட்

Ruturaj
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று பெங்களூருவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் தொடரினை கைப்பற்றிய வேளையில் கடைசி போட்டியிலும் வெற்றிபெறும் உத்வேகத்துடன் இந்திய அணியின் வீரர்கள் களமிறங்க காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே இந்த தொடரினை இந்திய அணி கைப்பற்றி விட்டதால் இன்றைய கடைசி போட்டியில் ஒரு சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அதனால் அணியில் சில மாற்றங்கள் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இன்றைய கடைசி ஆட்டம் நடைபெறும் பெங்களூரு மைதானமும் ஒரு ஹை ஸ்கோரிங் மைதானம் என்பதனால் இன்றைய போட்டியும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்க இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட்க்கு டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் மாபெரும் சாதனையை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் இன்றைய கடைசி போட்டியில் அவர் 19 ரன்களை அடித்தால் விராட் கோலி அந்த சாதனையை உடைத்து புதிய சாதனையை பதிவு செய்வார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஒரு சர்வதேச டி20 தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையில் விராட் கோலி 231 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து கே.எல் ராகுல் 224 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள ருதுராஜ் 213 ரன்கள் அடித்துள்ளார்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியில் இம்முறை ராயுடுவின் இடத்திற்கு சி.எஸ்.கே அந்த பெங்களூரு வீரரை வாங்குவாங்க – அஷ்வின் கணிப்பு

இன்றைய போட்டியில் அவர் மேலும் 19 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் 232 ரன்கள் அடித்து கோலியை மிஞ்சி ஒரு சர்வதேச டி20 தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக தனது பெயரை பதிவு செய்வார். அதோடு இந்த போட்டியில் ஒருவேளை 87 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் ஒரு சர்வதேச டி20 தொடரில் 300 ரன்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement