தோனி கூறிய இந்த வார்த்தைகளை பின்பற்றி சிறப்பாக ஆடி வருகிறேன் – நெகிழ்ச்சியாக பேசிய ருதுராஜ் கெய்க்வாட்

Ruturaj-3
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 49 ஆவது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

CSKvsKKR

- Advertisement -

அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரானா 61 பந்துகளில் 87 ரன்களையும், சுப்மான் கில் 17 பந்துகளில் 26 ரன்கள் குவித்தனர். தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 21 ரன் குவிக்க கொல்கத்தா அணி 172 ரன்களை குவித்தது.

அதன் பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ருதுராஜ் 53 பந்துகளில் 72 ரன்களையும், அம்பத்தி ராயுடு 38 ரன்களும் குவித்தனர். இறுதிநேரத்தில் ஜடேஜா 11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 3 சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரி என 31 ரன்களை அடித்து அசத்தினார். ருதுராஜ் ஆட்டநாயகனாக தேர்வானார்.

ruturaj 1

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் : இன்றைய போட்டியில் எனது பேட்டிங் சிறப்பாக இருந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் அணிக்கும் சரி, எனக்கும் சரி இது ஒரு நல்ல நம்பிக்கையை கொடுக்கும். நான் மீண்டும் எனது சிறப்பான ஆட்டத்திற்கு திரும்பி உள்ளேன். முதல் இரண்டு போட்டிகளில் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறினேன்.

ruturaj

ஏனெனில் அப்போது போட்டியின் சூழ்நிலை கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனால் தற்போது தோனி கூறியது போல எந்த ஒரு சூழ்நிலையிலும் மகிழ்ச்சியுடன் சிரித்தபடி விளையாடி வருகிறேன். நான் பாசிட்டிவ் எண்ணத்தோடு விளையாடி வருவதால் இனி எதிர்வரும் போட்டிகளைப் பற்றி பெரிதாக யோசிக்கபோவதில்லை. நிச்சயம் என்னால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement