உள்ளூர் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டின் காலில் விழுந்த ரசிகர். எல்லாத்துக்கும் காரணம் சி.எஸ்.கே தான் – சுவாரசிய சம்பவம்

Ruturaj-Gaikwad
- Advertisement -

இந்திய அணியின் இளம் துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்ற சிஎஸ்கே அணியில் முக்கிய வீரராக இடம்பிடித்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் பிற்பாதியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர் தற்போது சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் மாறியுள்ளார். அதோட சென்னை அணியின் அடுத்த கேப்டனே இவர் தான் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

2020-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு அடுத்த ஆண்டே இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோன்று அதனை கடந்த ஆண்டு அவருக்கு ஒருநாள் போட்டிக்கான அணியிலும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் எதிர்வரும் தொடர்களில் அவர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளிலும் இடம் பெற்று விளையாட வாய்ப்பு உண்டு என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

அந்த அளவிற்கு அவருடைய பேட்டிங் ஃபார்ம் மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்நிலையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரை தொடர்ந்து தனது திருமணத்தை முடித்துள்ள ருதுராஜ் கெய்க்வாட் தனது மனைவியுடன் தேனிலவுக்காக வெளிநாடு செல்லாமல் தற்போது மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் மகாராஷ்டிரா பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

அதில் புனேரி பாப்பா என்கிற அணிக்காக கேப்டனாக விளையாடும் அவர் இந்த தொடரின் முதல் போட்டியிலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார். இந்நிலையில் அந்த போட்டியின் போது அவர் விளையாடிக் கொண்டிருக்கையில் அவரை நோக்கி ஓடிவந்த ஒரு ரசிகர் அவர் காலில் விழுந்து வணங்கினார்.

- Advertisement -

பொதுவாகவே சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்த சச்சின், கங்குலி, தோனி, கோலி, ரோஹித், சேவாக், யுவராஜ் போன்ற பெரிய பெரிய வீரர்களின் காலில் ரசிகர்கள் விழுவது வழக்கம். ஆனால் இப்படி சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் பெரிய அளவில் சாதிக்காத ஒரு வீரரின் காலில் ரசிகர் விழுந்துள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

இதையும் படிங்க : இந்திய அணிக்காக 150 போட்டி கிட்ட விளையாடியாச்சி. ஆனாலும் என்னோட கனவு இன்னும் நிறைவேறல – சாஹல் ஓபன்டாக்

இதற்கு முக்கிய காரணமே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி கிடைக்கும் புகழ் அளவிற்கு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி குறைந்த நாட்களிலேயே ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் ருதுராஜ் கெய்க்வாட் புகழ்பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி தோனிக்கு அடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டனாகவும் இவர் பார்க்கப்படுவதால் இந்தியா முழுவதும் தற்போது ரசிகர்கள் மத்தியில் ருதுராஜ் கெய்க்வாட்டின் புகழ் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement