கொண்டாட்டத்தில் இருந்த பஞ்சாப் வீரர்களை சோகப்படுத்திய நோபால் – வீடியோ

kxip
- Advertisement -

நேற்றைய போட்டியில் அதிரடியாக ஆடிய ரஸ்ஸல் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அவர் 17 பந்துகளில் 48 ரன்களை குவித்தார். ஆனால், ரஸ்ஸல் 3 ரன்களில் இருந்தபோது பஞ்சாப் வீரர் ஷமி பந்தில் போல்ட் ஆனார். அப்போது வெளிவட்டத்தில் அதிக பீல்டர்கள் இருந்ததால் அந்த பந்து நோபால் அறிவிக்கப்பட்டது. இதனால் கொண்டாட்டத்தில் இருந்த பஞ்சாப் அணி வீரர்கள் சோகமடைந்தனர். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

அதன்பிறகு விஸ்வரூபமெடுத்து ஆடிய ரஸ்ஸல் பஞ்சாப் அணியின் அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். கடைசி 3 ஓவர்களில் 57 ரன்களை குவித்தது கொல்கத்தா அணி. இந்த ரன்களே கொல்கத்தா அணியின் வெற்றியையும் உறுதி செய்தது. ரஸ்ஸலின் அந்த விக்கெட் நேற்றைய ஆட்டத்தின் முடிவினை மாற்றியது என்றே கூறலாம்.

நேற்று இரவு 8 மணிக்கு நடந்த 6 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது பஞ்சாப் அணி அதனால் கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது.

அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதனால் 219 ரன்கள் இலக்கு பஞ்சாப் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 190 ரன்களை மட்டுமே எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Advertisement