உலக கோப்பை தொடரின் 27 வது போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இலங்கை அணி. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 232 இரண்டு அடித்தது அதிகபட்சமாக மேத்யூஸ் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பிறகு 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 47 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டோக்ஸ் 82 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் மலிங்கா சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களுக்கு 43 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
Raanavathula azhinjavanoda aanavathula azhinjavan dhaan jasthi. Sammandha pattavaalku puriyum nu nenaikaren. #Bigil #SriLanka #Mali #Dimma #HappyBirthdayThalapathy pic.twitter.com/uBIJb4uXyu
— Russel Arnold (@RusselArnold69) June 22, 2019
இந்நிலையில் நேற்று இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்று அனைவருமே எதிர்பார்த்த நிலையில் மலிங்காவின் சிறப்பான பந்து வீச்சு மற்றும் இலங்கை அணி வீரர்களின் சிறப்பான பீல்டிங் காரணமாக இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரசல் அர்னால்டு தமிழில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பிகில் திரைப்படத்தின் போஸ்டரை வைத்து அதில் இலங்கை அணியின் கேப்டன் புகைப்படத்தையும் மற்றும் மலிங்கா புகைப்படத்தையும் பகிர்ந்து ராணுவத்தில் அழிந்தவனைவிட ஆணவத்தில் அழிந்ததுதான் அதிகம் இது சம்பந்தப்பட்டவங்களுக்கு புரியும் என்று இங்கிலாந்து அணியை கலாய்த்து மறைமுகமாக ட்வீட் செய்துள்ளார்.