சி.எஸ்.கே அணியில் மீண்டும் இணைகிறாரா சுரேஷ் ரெய்னா? வெளியான தகவல் – உண்மை விவரம் என்ன?

Raina
- Advertisement -

கடந்த சில நாட்களாகவே அடுத்த ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலம் குறித்த செய்திகள் தான் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் டிரேடிங் நடைமுறையில் வீரர்களை மாற்றிக்கொள்வது இன்று டிசம்பர் 26-ஆம் தேதியுடன் நிறைவுக்கு வருகிறது. இதன்மூலம் எந்தெந்த வீரர்கள் ஒரு அணியில் இருந்து மற்றொரு அணிக்காக டிரேடிங் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்த முழுவிவரமும் இன்று வெளியாகும்.

அதேபோன்று அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் ஏலமானது டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு தேர்வு செய்ய காத்திருக்கின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணிக்காக எந்தெந்த வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் நிலவி வருகிறது.

- Advertisement -

இவ்வேளையில் சுரேஷ் ரெய்னா மீண்டும் சிஎஸ்கே அணியில் இணையப்போகிறார் என்ற ஒரு தகவல் தற்போது அதிகளவில் பரவி வருகிறது. ஏற்கனவே சென்னை அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட சுரேஷ் ரெய்னா கடந்த ஆண்டு எந்த ஒரு அணிக்காகவும் விலை போகாத வேளையில் தற்போது சிஎஸ்கே அணிக்காக அவர் பேட்டிங் கன்சல்டன்ட்டாக இணைய இருக்கிறார் என்ற ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

சென்னை அணிக்காக பல ஆண்டுகள் விளையாடிய அனுபவம் உடைய சுரேஷ் ரெய்னா மிடில் ஆர்டரில் அதிரடியாக ரன் குவிப்பதோடு மட்டுமின்றி பீல்டிங்கிலும் அசத்தக்கூடியவர். இதன் காரணமாகவே சென்னை அணியின் நிர்வாகம் அவருக்கு பேட்டிங் கன்சல்டன்ட் பொறுப்பை வழங்க இருக்கிறது என்றெல்லாம் தகவல்கள் பரவி வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் இப்படி பரவிவரும் தகவலின் உண்மை விவரம் யாதெனில் : இது முற்றிலும் ஒரு பொய்யான தகவல் என்றும் இது வதந்தியாக மட்டுமே பரவி வருவதாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் தற்போது சுரேஷ் ரெய்னா லெஜெண்ட் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். அதோடு சிஎஸ்கே எந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டாலும் அதிகாரப்பூர்வமாகவே வெளியிடும். குறிப்பாக பிராவோ ஓய்வு பெற்றபோது அவரை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இதையும் படிங்க : தோனியின் ரசிகர்கள் இன்றளவும் எனக்கு மெயில் அனுப்பி திட்டி தீக்குறாங்க – மார்ட்டின் குப்தில் வெளிப்படை

அதேபோன்று சுரேஷ் ரெய்னாவும் சிஎஸ்கே அணியில் ஏதாவது ஒரு பொறுப்பில் இணைந்தால் நிச்சயம் அவர்கள் வெளிப்படையாக அறிவித்திருப்பார்கள். ஆனால் இன்றளவும் ரெய்னா குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிடாததால் சுரேஷ் ரெய்னா சென்னை அணியில் இணையப்போகிறார் என்று பரவும் செய்திகள் எல்லாம் ஒரு வதந்தி தான் என்பது தெரியவந்துள்ளது.

Advertisement