ராஜஸ்தான் அணியின் இந்த படு மோசமான தோல்விக்கு அவர்கள் போட்ட தப்பு கணக்கே காரணம் – விவரம் இதோ

karthik
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 12 ஆவது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் முதலில் பந்து வீச தீர்மானித்து. அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை குவித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக துவக்க வீரர் சுப்மான் கில் 47 ரன்கள் அடித்தார். மேலும் இறுதி நேரத்தில் மோர்கன் சிறப்பாக விளையாடி 34 ரன்களை குவித்தார். இதன் காரணமாக 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த போட்டியில் மிகபெரிய சேசிங்கை செய்த ராஜஸ்தான் அணி இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் 20 ஓவர்களின் முடிவில் அவர்களால் 9 விக்கெட்டுக்களை இழந்த 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா அணி 37 ரன்கள் வித்தியாசசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் டாம் கரன் சிறப்பாக விளையாடி 54 ரன்களை அடித்தார். மற்றபடி யாரும் பெரிய அளவில் ஸ்கோர் செய்யவில்லை. மேலும் அந்த அணியின் 8 வீரர்கள் ஒற்றை இலக்கில் ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. சார்பாக கொல்கத்தா அணியின் இளம் வீரரான சிவம் மாவி 2 விக்கெட்டுகளையும், நாகர்கோட்டி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக 4 ஓவர்களை வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிவம் மாகி தேர்வானார்.

Dk

இந்நிலையில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு அவர்களது முறையற்ற பேட்டிங்கும், அவர்கள் மைதானத்தின் தன்மையை கணிக்காமல் விளையாடியதும் தான் காரணம் என்றும் பல கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஏனெனில் அவர்கள் இதுவரை வெற்றி பெற்ற இரண்டு போட்டிகளும் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றவை. அளவில் மிகச்சிறிய மைதானமாக கருதப்படும் ஷார்ஜாவில் ராஜஸ்தான் அணி வீரர்கள் அதிரடியாக ஆடி சிக்சர்களை பறக்கவிட்டனர்.

- Advertisement -

ஆனால் துபாய் மைதானம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. அளவில் மிகப் பெரிதான துபாய் மைதானத்தில் அவர்கள் பவுண்டரி அடிக்க வேண்டுமென்றால் பலமாக அடிக்க வேண்டும் ஷார்ஜாவில் தொட்டாலே பந்தை சிக்சருக்கு பறக்கும். ஆனால் துபாயில் அப்படி நடக்கவில்லை முறையான கிரிக்கெட் விளையாடினால் மட்டுமே பந்தை பவுண்டரிக்கு செல்லும். இல்லையெனில் வந்து பீல்டரின் கைகளுக்கே செல்லும். நேற்றைய போட்டியில் அதிரடியாக வீரம் விளையாடும் வீரர்கள் பலரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது நாம் கண்டோம்.

mavi 1

மைதானத்தின் இந்த தன்மையை உணராமல் ராஜஸ்தான் அணி வீரர்கள் அடித்து ஆட நினைத்து ஆட்டமிழந்தனர். இதற்கு உதாரணமாக அந்த அணியில் 8 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. மேலும் போட்டி முடிந்ததும் அந்த அணியின் கேப்டன் ஸ்மித் கூட ஷார்ஜா மைதானத்தில் விளையாடுவது போன்று இதில் விளையாட எங்களது வீரர்கள் விளையாட முயற்சித்தனர் இது தவறு என்று சுட்டிக் காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement