டி20 உலகக் கோப்பை 2024 : பும்ரா மாதிரி சிராஜை நம்பாம அர்ஷ்தீப்புக்கு அந்த வாய்ப்பை கொடுங்க.. ஆர்பி சிங்

RP Singh
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக இந்திய அணி தயாராகி வருகிறது. இம்முறையும் ரோகித் சர்மா தலைமையில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலி, சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் தேர்வாகியுள்ளனர். எனவே 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்லுமா என்ற வழக்கமான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

முன்னதாக இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் வேகப்பந்து துறையில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் பும்ரா எந்த நேரத்திலும் துல்லியமாக பந்து வீசி வெற்றியை பெற்றுக் கொடுக்கக் கூடியவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஆர்சிபி அணியில் முகமது சிராஜ் சுமாராகவே செயல்பட்டு தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

- Advertisement -

சிராஜ் வேண்டாம்:
அதே போல அர்ஷிதீப் சிங் பஞ்சாப் அணியில் 14 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை எடுத்தாலும் 10.03 என்ற என்ற எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கினார். இந்நிலையில் 16 – 20 வரையிலான டெத் ஓவர்களில் பும்ரா 3 ஓவர்களை வீச வேண்டும் என்று 2007 டி20 உலகக் கோப்பை வென்ற முன்னாள் வீரர் ஆர்பி சிங் தெரிவித்துள்ளார். எஞ்சிய ஒரு ஓவரை சிராஜுக்கு பதிலாக அர்ஷிதீப் சிங் வீச வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் செயல்பாடுகளை வைத்து பார்க்கும் போது அர்ஷிதீப் தனது வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தவில்லை என்று நினைக்கிறேன். பவுலர்களை சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது கேப்டன்களை மையப்படுத்தியது. எனக்கு தெரிந்த வரை அமெரிக்காவில் போட்டி நடைபெறும் காலை வேளையில் பிட்ச் கொஞ்சம் மெதுவாக இருக்கும்”

- Advertisement -

“எனவே நல்ல லென்த்துக்கு கொஞ்சம் ஷார்ட்டாக வீசுவதே அங்கே சரியான லென்த்தாக இருக்கும். அங்கே பவுலர்களுக்கு அதிக ஸ்விங் கிடைக்காது. எனவே யார்க்கர் பந்துகள் மட்டுமின்றி ஸ்லோயர், லெக் மற்றும் ஆஃப் கட்டர் பந்துகளை பவுலர்கள் அங்கே பயன்படுத்த வேண்டும். இது போன்ற பந்துகளை அர்ஷ்தீப் பயன்படுத்தும் திறமையை கொண்டுள்ளார். அதை செய்தால் அவருடைய வெற்றி விகிதமும் தாமாக அதிகரிக்கும்”

இதையும் படிங்க: துபே மீது நம்பிக்கை வைத்த ரோஹித் சர்மா.. இந்தியாவின் 2 பிரச்சனையை தீர்க்க திட்டம்.. கடினமான பயிற்சி

“டி20 கிரிக்கெட்டில் டெத் ஓவர்கள் மிகவும் முக்கியம். அங்கே நம்முடைய முதன்மை வீரரான பும்ரா 3 ஓவர்களை வீசலாம். அவருடன் சிராஜுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் பந்து வீச வேண்டும். ஏனெனில் அவரிடம் வேரியசன்கள் இருக்கிறது. முகமது சிராஜ் புதிய பந்தில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். மற்ற படி பும்ரா, அர்ஷ்தீப் கடைசிக்கட்ட ஓவர்களில் பந்து வீச வேண்டும்” என்று கூறினார்.

Advertisement