- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணி எங்க விளையாடினாலும் அவங்கல தோக்கடிக்குறது கஷ்டம் தான் – நியூசி வீரர் வெளிப்படை

கிரிக்கெட் ரிசகர்கள் அனைவரின் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளது. தற்போது இந்த இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளில் இடம்பிடித்து இருக்கும் வீரர்களிடம் தனிதனியாக பேட்டி எடுத்து வரும் தனியார் விளையாட்டு சேனல் ஒன்றிர்கு பேட்டியளித்திருக்கும் நியூசிலாந்து அணியின் முன்னனி வீரர் ஒருவர், இந்திய அணியானது எந்த ஒரு சூழ்நிலையிலும் வலுவான எதிரணியாகவே இருக்கும் என்று கருத்து கூறியிருக்கிறார்.

நியூசிலாந்து அணியின் முன்னனி மற்றும் மூத்த வீரராக திகழும் ராஸ் டெய்லர் இந்த இறுதிப் போட்டியில் மிக முக்கியமான வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரிடம் எடுத்த பேட்டியில் அவர் கூறியதாவது, இந்திய அணியானது அதன் சொந்த மண்ணில் மட்டுல்ல மற்ற நாட்டு ஆடுகளங்களில் மற்றும் பொதுவான ஆடுகளங்களில் விளையாடும்போதுகூட வலுவான எதிரணியாக தான் இருக்கும். இளம் வீரர்கள் பலபேர் அந்த அணியில் தங்களது திறமைகளை நிரூபித்து உள்ளனர். கடந்த ஆஸ்திரேலிய தொடரில் அவர்களால் தான் இந்திய அணி வெற்றி பெற்றது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

- Advertisement -

எனவே இந்த இறுதிப் போட்டிக்கு எந்த மாதிரியான ப்ளேயிங் லெவனோடு களமிறங்க வேண்டும் என்பதை அவர்கள் நன்றாகவே அறிந்து வைத்திருப்பார்கள் என்று அவர் கூறினார். இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு எந்த ஒரு பயிற்சி போட்டியும் இல்லாததால், இந்திய அணியின் வீரர்கள் தங்களுக்குள்ளாகவே இரண்டு அணிகளாக பிரிந்து இன்ட்ரா ஸ்குவாட் பயிற்சி போட்டியில் விளையாடி முடித்திருக்கின்றனர். இதனை குறிப்பிட்டு பேசிய ராஸ் டெய்லர் கூறியதாவது,

நாங்கள் இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக இங்கிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளோம். அதனால் சில விடயங்களை எங்களால் அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால் இந்திய அணிக்கு அப்படி எதுவும் இல்லை. அவர்கள் விளையாடிய பயிற்சிப் போட்டியைப் பார்த்தால், அதை அவர்கள் பயிற்சி போட்டியாக நினைத்து விளையாடியதுபோல் தெரியவில்லை. ஒவ்வொரு வீரரும் தங்களது திறமையை வெளிக்காட்டி உள்ளனர். கொடுக்கப்பட்ட சிறிது நாட்களுக்கு உள்ளாகவே அவர்கள் இந்த இறுதிப் போட்டிக்கு தயாராகி இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. பேட்டிங் மட்டுமில்லாமல் அவர்களின் பௌலிங் வரிசையும் மிக வலுவானதாகவே இருக்கிறது என்றும் அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

நாளை மறுதினம் நடக்கவுள்ள இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக 15 வீரர்கள் கொண்ட பட்டியலை அறிவிக்கும்படி இரண்டு அணிகளிடமும் ஐசிசி தெரிவித்து இருந்தது. அதன்படி தற்போது இரண்டு அணிகளும் தங்களது இறுதிகட்ட அணியைத் தேர்ந்துடுத்துள்ளதன. இந்திய அணியில் மயாங் அகர்வால், கே எல் ராகுல், ஷர்தூல் தாக்கூர் ஆகிய வீரர்கள் இந்த 15 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by