நான் சதமடித்து சிறப்பாக ஆடினாலும், வெற்றிக்கு இவரே காரணம் – ஆட்டநாயகன் ராஸ் டெய்லர் பேட்டி

Taylor-3
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசியது.

indvsnz

- Advertisement -

அதன்படி 50 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 103 ரன்களும், ராகுல் 88 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கேப்டன் கோலியும் 51 அடிக்க பேட்டிங்கில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது.

அதனைத் தொடர்ந்து 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 348 ரன்களை குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூஸிலாந்து சார்பாக ராஸ் டைலர் 84 பந்துகளில் 109 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார். மேலும் அந்த அணியின் கேப்டன் லேதம் மற்றும் துவக்க வீரர் ஹென்றி நிகோலஸ் ஆகியோர் அரைசதம் அடித்து வெற்றிக்கு பங்களித்தனர்.

taylor 1

இந்த போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் ராஸ் டைலர் கூறுகையில் : வெற்றிக்கு இந்த முறை அழைத்துச் செல்வதில் மிகவும் மகிழ்ச்சி. இந்திய அணியை 350 ரன்களுக்குள் சுருட்டியது எங்களின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. எதிர்பாராதவிதமாக எங்கள் அணியில் வலதுகை இடதுகை பேட்ஸ்மேன்கள் காம்பினேஷன் இருப்பதால் இந்த சிறிய மைதான எல்லையை குறிவைத்து அடிக்க ஆரம்பித்தோம்.

Taylor

லேதம் விளையாட வந்ததும் என் மீதிருந்த அழுத்தத்தை அவர் குறைத்தார். இந்த மைதானத்தில் எப்பொழுதும் நான் சிறப்பாக விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதேபோன்ற சிறப்பான ஆட்டத்தை அடுத்த போட்டியிலும் வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறேன். கடைசியாக 3 டி20 போட்டிகளில் தோற்ற அதற்கு பிறகு இது ஒரு நல்ல திருப்பம் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement