என்னுடைய 100 ஆவது போட்டியில் இந்த ஒரு விடயத்தை மட்டும் கடைபிடிக்க விரும்புகிறேன் – ராஸ் டெய்லர் ஓபன் டாக்

Taylor
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று வெலிங்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் மைதானத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

Ind-1

- Advertisement -

அதன்படி தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது இதுவரை முதல் நாள் தேனீர் இடைவேளை வரை இந்திய அணி 55 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை குவித்துள்ளது. பண்ட் 10 ரன்களுடனும், ரஹானே 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். துவக்க வீரராக அகர்வால் மட்டும் சற்று நிதானமாக விளையாடி 34 ரன்கள் குவித்தார்.

இந்நிலையில் இன்று நியூசிலாந்து அணியின் முன்னணி வீரரான ராஸ் டெய்லர் தனது 100வது டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றார். இதுகுறித்து அவர் பேசியதாவது : இந்த தருணத்தை நான் நினைத்து ஆச்சரியப்படுகிறேன். இப்பொழுது எனக்கு நூறு பாட்டில் ஒயின் தேவை அதை பருக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் அதை இப்போது கொஞ்ச நேரம் தள்ளி வைக்கலாம்.

Taylor1

ஏனெனில் இதுவரை நியூசிலாந்து அணிக்காக 100 போட்டிகளுக்கு மேல் விளையாடி பிளம்மிங் மெக்கல்லம், டேனியல் வெட்டோரி ஆகியோர் கடைப்பிடித்த பாரம்பரிய நான் காப்பாற்ற விரும்புகிறேன். மேலும் இந்த 100வது டெஸ்ட் போட்டியை நிச்சயம் வெற்றியுடன் கொண்டாடுவோம் என்று நினைக்கிறேன் என்று டெய்லர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Rain

இந்நிலையில் தற்போது உணவு இடைவேளைக்குப் பிறகு போட்டி துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மைதானத்தில் மழை வலுவாக பெய்து வருகிறது. இதன் காரணமாக மைதானத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்ற அதிக நேரம் தேவைப்படும் என்பதால் மீதியிருக்கும் ஆட்டம் ரத்து செய்யப்படும் என்றும் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வரும் என்றும் தெரிகிறது.

Advertisement