Rohith Sharma : தொடர்ந்து சொதப்பும் அம்பயர்கள். சர்ச்சைக்கு உண்டான ரோஹித் விக்கெட்

உலக கோப்பை தொடரின் 34ஆவது போட்டி இன்று துவங்கியது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுகின்றன

Rohith
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 34ஆவது போட்டி இன்று துவங்கியது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுகின்றன.

ind vs wi

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கோலி 72 ரன்களை குவித்தார். தற்போது 269 ரன்கள் இலக்கை எதிர்த்து விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணி தயாராகி வருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரரான ரோஹித் சர்மாவின் விக்கெட் சர்ச்சைக்கு உண்டான முறையில் அம்பயரின் கவனக்குறைவினால் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி 6 ஆவது ஓவரை வீசி ரோச் பந்துவீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ரோஹித் வெளியேறினார்.

Rohith 1

ஆனால், அந்த பந்து ரிவீயு முறைப்படி பார்க்கும்போது பந்து பேட் மற்றும் கால்பேடு ஆகிய இரண்டிற்கும் நடுவில் இரண்டிலுமே பட்டு சென்றது. ஆனால், பந்து முதலில் பந்து பேட்டில் பட்டதா என்று தெரியவில்லை. இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் பேட்ஸ்மேன் தப்பித்திருக்க வேண்டும். ஆனால், அம்பயர் அவுட் கொடுத்தது ரோஹித் மற்றும் இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Advertisement