ஐ.பி.எல் மற்றும் டி20 உலகக்கோப்பை இரண்டில் எந்தத்தொடரில் விளையாடனும் – ரோஹித் குடுத்த பதிலை பாருங்க

Rohith
- Advertisement -

இந்த ஆண்டு நடக்கவிருக்கும் வேண்டிய ஐபிஎல் தொடர் தற்போது வரை எந்த ஒரு அறிவிப்பும் இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடர் குறித்தும் எந்த ஒரு செய்தியும் இல்லை.

Ipl cup

- Advertisement -

ஐசிசி இதுகுறித்து அறிவித்தால் தான் ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டு அதற்கு பதில் ஐபிஎல் தொடர் நடத்தப்படலாம் என்று செய்தி வந்து கொண்டிருக்கிறது. இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா இந்த செய்தி குறித்து பேசியுள்ளார்.

ரசிகர் ஒருவர் நீங்கள் ஐபிஎல் அல்லது டி20 உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்று நினைத்தால் எந்த ஒரு தொடரில் விளையாடுகிறீர்கள் என்று கேட்டார் இதற்கு பதிலளித்த அவர் எனக்கு இரண்டு தொடர்களில் விளையாட வேண்டும் இந்த வருடம் இரண்டுமே நடக்க வேண்டும். அதுதான் எனக்கு பிடிக்கும்.

மேலும் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள பின்க் பந்து டெஸ்ட் போட்டியும் போட்டியிலும் தான் பங்கேற்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 4 கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த வருடம் ஐபிஎல் தொடர் நடக்க வேண்டுமென்றால் ஐசிசி பிசிசிஐக்கு வழிவிட வேண்டும். இல்லை என்றால் சற்று கடினம் தான்.

ஆஸ்திரேலியாவில் உலக கோப்பை தொடர் நடப்பதும் சற்று சாத்தியமற்ற விஷயம்தான். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆறு மாத காலத்திற்கு வெளிநாட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கூட்டி கழித்து பார்த்தால் டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் தள்ளி வைக்கப்படும் ஐபிஎல் தொடர் இந்த வருட அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்கும் என்று தெரிகிறது.

Advertisement