புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டதும் விராட் கோலி குறித்து பேசிய ரோஹித் சர்மா – முழுவிவரம் இதோ

rohith
- Advertisement -

இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ நேற்று வெளியிட்ட அறிவிப்பின் படி இந்திய அணியின் புதிய ஒருநாள் கேப்டனாக ரோஹித்தை அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்துள்ளது. ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து தனது கேப்டன் பதவியை துறந்த விராட் கோலி தற்போது 50 ஓவர் கிரிக்கெட்டிலும் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் ரன் குவிக்க தடுமாறி வருவதாலும், அணியில் அவரது ஆதிக்கம் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rohith

- Advertisement -

கடந்த மாதம் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகிய விராட் கோலிக்கு தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்தும் விலக அழுத்தம் அதிகரித்து வந்த நிலையில் விராட் கோலி அதிரடியாக ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இந்நிலையில் விராட் கோலியின் இடம் குறித்து பேசியுள்ள புதிய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : கோலியின் பங்களிப்பு ஒரு பேட்ஸ்மேனாக இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. விராட் கோலியை போன்ற ஒரு குவாலிட்டியான வீரர் எப்போதுமே அணிக்கு தேவை. ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அவர் 50 ரன்கள் சராசரி வைத்துள்ளார். அதுமட்டுமின்றி மிகப்பெரிய அனுபவமும் அவரிடம் உள்ளது.

Rohith-1

நிச்சயம் அவர் இக்கட்டான வேளைகளில் இந்திய அணியை மீட்டெடுக்கும் தகுதி உடையவர் என்று ரோகித் சர்மா கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : விராட் கோலி போன்ற வீரர் அணியில் இருப்பது ஒரு கேப்டனாக எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். நாங்கள் இருவரும் நிறைய கிரிக்கெட் விளையாடி உள்ளோம். அதனால் இனி வரும் காலங்களிலும் நான் கேப்டனாக இருந்தாலும் கோலி எனக்கு மிகவும் உதவியாக இருப்பார் என்று ரோகித் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : தோனியும் நானும் ஒரு தாய் வயிற்றில் பிறக்கவில்லை என்றாலும் சகோதரர்கள் தான் – சி.எஸ்.கே வீரர் நெகிழ்ச்சி

ஏற்கனவே பிசிசிஐ டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்க்கு ஒரே வீரர் தான் கேப்டனாக இருக்க வேண்டும் என்றும் டெஸ்ட் போட்டிக்கு வேண்டும் என்றால் தனியாக கேப்டனை நியமித்துக் கொள்ளலாம் என்ற முடிவில் இருந்தது. அதன்படி ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ரோகித்தையும், டெஸ்ட் கேப்டனாக கோலியையும் மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement