இவங்க 2 பேரோட ஆட்டம் தான் இரண்டாவது போட்டியின் வெற்றிக்கு காரணம் – ரோஹித் பெருமிதம்

rohith
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்த வேளையில் நேற்று அதே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

INDvsWI

- Advertisement -

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இறுதியில் 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்காரணமாக 44 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் பந்து வீச்சில் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரசித் கிருஷ்ணா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் கூறுகையில் :

prasidh

இந்த தொடரை வென்றது உண்மையிலேயே மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்த போட்டியில் சில சவால்களை நாங்கள் சந்தித்தோம். துவக்கத்திலேயே அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்த பின்னரும் ராகுல் மற்றும் சூர்யா ஆகியோர் தங்களது முதிர்ச்சியான ஆட்டத்தை இந்த போட்டியில் வெளிப்படுத்தினர்.

- Advertisement -

நிச்சயம் இந்த போட்டியில் ஒரு டீசன்டான ரன் குவிப்பை எங்களால் வழங்க முடியும் என்று நினைத்தோம். அதன்படி அவர்கள் இருவரும் சிறப்பான போராட்டத்தை அளித்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இன்றைய போட்டியில் எங்களது அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. ஒரு இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீண்டு வந்து இந்திய அணி ரன் குவித்தது நம்முடைய மனநிலையை வெளிக்காட்டுகிறது.

இதையும் படிங்க : நேற்றைய போட்டியில் ரிஷப் பண்ட் துவக்க வீரராக களமிறங்க இதுதான் காரணம் – கேப்டன் ரோஹித் சர்மா

சூர்யகுமார் யாதவ் தனது இடத்தை புரிந்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோன்று கேஎல் ராகுல் அணியில் வெவ்வேறு இடத்தில் விளையாடி வந்தாலும் அவரும் சிறப்பாக விளையாடி வருகிறார். இவர்கள் இருவரது பொறுப்பான ஆட்டம் காரணமாகவே எங்களால் ஒரு நல்ல ரன் குவிப்பை வழங்கி இந்த போட்டியில் வெற்றி பெற முடிந்தது என ரோகித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement