இது கிரிக்கெட்டிற்கு அழகில்லை. நாங்கள் பெற்ற வெற்றி சரியான வழியில் கிடைக்கவில்லை – வருந்திய ரோஹித்

Rohith
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல் தொடரின் 7 ஆவது போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், பெங்களூரு அணிக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பாக ரோஹித் சர்மா 48 ரன்களை குவித்தார். ஹார்டிக் பாண்டியா 14 பந்துகளில் 32 ரன்களை குவித்தார்.

Kohli

- Advertisement -

பிறகு ஆடிய பெங்களூரு அணிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டது. அதன்படி தெடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 181 ரன்களை குவித்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டிவில்லியர்ஸ் 41 பந்தில் 70 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி சார்பில் பும்ரா 4 ஓவர்கள் வீசி 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

இந்த போட்டியில் வெற்றிக்கு பிறகு பேசிய மும்பை கேப்டன் ரோஹித் கூறியதாவது : நாங்கள் எல்லை கோட்டினை கடந்து சென்ற பின்னரே மலிங்கா வீசிய கடைசி பந்து நோபால் என்று தெரிய வந்தது. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். மேலும் இதுபோன்ற நிகழ்வு நல்ல கிரிக்கெட்டிற்கு அழகில்லை. நாங்கள் பெங்களூரு அணிக்கு நிர்ணயித்த இலக்கு போதுமானது என்றே நான் நினைக்கிறன்.

Malinga

மேலும், எங்கள் அணியின் பந்துவீச்சாளர்களான மலிங்கா மற்றும் பும்ரா ஆகியோர் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினார்கள். போட்டிகளில் ஏற்படும் சிறிய தவறுகள் ஆட்டத்தினை மாற்றுகின்றன. இனிமேலாவது இதுபோன்ற தவறுகள் நிகழாமல் இருக்க நான் கேட்டுக்கொள்கிறேன் என்று ரோஹித் சர்மா கூறினார்.

Advertisement