ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் சேர்க்காததற்கு இதுவே காரணம். என்ன பண்றது – வருத்தம் தெரிவித்த ரோஹித்

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று கொல்கத்தா மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 61 ரன்களும் கையில் மேயர்ஸ் 31 ரன்களும் குவித்தனர்.

INDvsWI

- Advertisement -

அதன் பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 162 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக சூர்யகுமார் யாதவ் 34 ரன்களுடனும், வெங்கடேச ஐயர் 24 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த போட்டியில் அறிமுக வீரராக விளையாடிய ரவி பிஷ்னோய் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் காரணமாக அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து ஸ்ரேயாஸ் அய்யர் அணிகள் இணைக்கப்படாதது குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

shreyas

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற ஒரு வீரரை வெளியில் அமர வைப்பது மிகவும் ஒரு கடினமான முடிவு தான். அவரை பிளேயிங் லெவனில் எடுக்க முடியாமல் போனது மிக வருத்தமான ஒன்று. இருப்பினும் அணிக்கு எது தேவையோ அதை நாம் செய்தாக வேண்டிய அவசியம் உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் மிடில் ஓவர்களில் பந்துவீசும் சில பேட்ஸ்மேன்கள் தேவை. அந்த ஒரு காரணமாகத்தான் இன்றைய போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. இருப்பினும் அணியில் இடம் பிடிக்க வீரர்களுக்கு இடையே போட்டி நிலவி வருவது அணியின் பென்ச் வலிமையை காட்டுகிறது.

இதையும் படிங்க : அந்த நாட்டு கிரிக்கெட் சீரழிவதற்கு காரணமே ஐபிஎல் தான் – மிக்கி ஆர்தர் குற்றச்சாட்டு

அதோடு இன்றைய போட்டியில் நமது வீரர்கள் வெளிப்படுத்திய சிறப்பான பார்ம் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதோடு எதிர்வரும் உலகக் கோப்பைக்கு நிச்சயம் ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இருப்பார் என்றும் ரோகித்சர்மா உறுதியளித்துள்ளார்.

Advertisement