மும்பை அணியில் இவங்க 3 பேரும் எந்த வேலையை குடுத்தாலும் கரெக்ட்டா பண்ணுவாங்க – ரோஹித் புகழாரம்

Rohith-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் குவித்தது.

MIvsDC

அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 50 பந்துகளில் 65 ரன்களும், பண்ட் 38 பந்துகளில் 56 ரன்கள் குவித்தனர். அவர்களை தவிர மற்ற யாரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. மும்பை அணி சார்பாக டிரென்ட் போல்ட் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 30 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், குல்டர்நைல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

அதன்பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி டெல்லி அணியின் பந்துவீச்சை அனாயசமாக எதிர்கொண்டது. இறுதியில் 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரரான ரோகித் சர்மா 51 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இறுதியில் இஷான் கிஷன் 19 பந்துகளில் 33 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக டிரென்ட் போல்ட் தேர்வானார்.

Ishan kishan

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பல விடயங்களைப் பகிர்ந்து கொண்ட மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மும்பை அணியின் மூன்று முக்கிய வீரர்கள் குறித்தும் தனது கருத்தினை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : க்ருனால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா மற்றும் பொல்லார்ட் ஆகியோர் கடந்த பல ஆண்டுகளாக மும்பை அணிக்காக தங்களது சிறப்பான பணியை செய்து வருகின்றனர்.

Pollard

அந்த வகையில் இந்த ஆண்டும் அவர்கள் மூவரும் சிறப்பாகவே விளையாடினார்கள். இந்த மூவருக்கும் அவர்களது ரோல் என்னவென்று சரியாக தெரியும். அதனால் அணியில் எந்த இடத்தில் அவர்களை களம் இறங்கி விளையாட சொன்னாலும் அதற்கேற்றார் போல் தங்களை மாற்றிக் கொண்டு சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை பெற்று தருகின்றனர் என்று அவர்கள் மூவரையும் ரோகித் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement