Rohith Sharma : பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் குறித்து ரோஹித் அளித்த நகைச்சுவையான பேட்டி

நேற்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 113 பந்துகளுக்கு 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர் பாகிஸ்தான் அணியின்

Rohith-1
- Advertisement -

நேற்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 113 பந்துகளுக்கு 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக எதிர் கொண்டார் போட்டி. முடிந்து பத்திரிக்கையாளர்கள் ரோஹித் சர்மாவிடம் பாகிஸ்தான் பேட்ஸ்மென்களுக்கு உங்களது அறிவுரை என்ன என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த ரோகித் : நான் நிச்சயம் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அறிவுரை வழங்குவேன் ஆனால் நான் அவர்கள் அணியின் பயிற்சியாளராக இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறேன் என்று நகைச்சுவையாக பதிலளித்தார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

rohith

- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் 140 ரன்களும், கோலி 77 ரன்களையும் குவித்தனர்.

rohith

அதன் பின்னர் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 35 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழைய குறுக்கிட்டதால் போட்டி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ஓவர்களில் 136 ரன்கள் அதாவது 40 ஓவர்களில் 302 ரன்கள் அடிக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் 40 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை மட்டுமே அடித்தது. இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Advertisement