இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா நேற்று நடந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தப் போட்டியில் மலிங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதன் மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் 338 விக்கெட்டுகளுடன் மூன்றாமிடத்தில் மலிங்கா உள்ளார். இந்நிலையில் மலிங்காவின் ஓய்வு குறித்து கிரிக்கெட் வீரர் பலர் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது : மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த பல ஆண்டுகளாக முக்கிய வீரராக மலிங்கா திகழ்ந்தார். கேப்டனாக நான் இக்கட்டான சூழ்நிலையில் அவரைப் பந்துவீச அழைத்தாலும் அவர் என்னை ஒருபோதும் ஏமாற்றியது இல்லை. அவர் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு ஆற்றியவர். அவருடைய வருங்கால வாழ்க்கைக்கு எனது வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
If I had to pick one match winner among many others for @mipaltan in the last decade, this man will be on the top for sure. As a captain he give me breather during tense situation and he never failed to deliver, such was his presence within the team. Best wishes LM for the future pic.twitter.com/gJJJKy8gL3
— Rohit Sharma (@ImRo45) July 26, 2019
இது போன்ற பலரும் மலிங்காவிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதனால் மலிங்கா தற்போது வாழ்துமையில் நனைந்தபடி உள்ளார்.