Rohith Sharma : நாங்கள் அனைத்தும் முயற்சி செய்து விட்டோம். எதுவும் நடக்கவில்லை – ரோஹித் வருத்தம்

ஐ.பி.எல் தொடரின் 27 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ரஹானே தலைமை

Rohith
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 27 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

Rahane 1

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக டி காக் 52 பந்துகளில் 81 ரன்களை குவித்தார். ரோஹித் 47 ரன்களை அடித்தார். பிறகு 118 ரன்கள் இலக்காக ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை குவித்தது. இதனால் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி சார்பாக ஜாஸ் பட்லர் 43 பந்துகளில் 89 ரன்களை குவித்தார். இதில் 7 சிக்ஸர்களும் 8 பவுண்டரிகளும் அடங்கும். ஆட்டநாயகனாக பட்லர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Buttler

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ரோஹித் கூறுகையில் : இந்த வெற்றி ராஜஸ்தான் அன்னிக்கே உரித்தானது ஆகும். அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். பதட்டமான சூழ்நிலையிலும் பட்லர் சிறப்பாக விளையாடினார். நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம் ஆனால் எதுவுமே எடுபடவில்லை. இந்த மைதானத்திற்கு இந்த இலக்கு போதுமானது என்றே நினைக்கிறன்.

Buttler 1

இந்த மைதானத்தில் முதலிலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கவேண்டும். ஆனால், நாங்கள் அதனை செய்யவில்லை இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது. யார்க்கர் பந்தில் கூட ரன்களை விட்டு கொடுத்தோம். பட்லர் எங்களிடம் இருந்து வெற்றியை பறித்துவிட்டார்.

Advertisement