Rohith Sharma : பெங்களூரு அணிக்கு எதிரான இந்த பிரமாதமான வெற்றிக்கு இவரே காரணம் – ரோஹித் பெருமிதம்

ஐ.பி.எல் தொடரின் 31 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ரோஹித் தலைமையிலான மும்பை அணியும், விராட் கோலி தலைமை

Rohith
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 31 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ரோஹித் தலைமையிலான மும்பை அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் மோதின.

Kohli

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது மும்பை அணி. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடி 51 பந்துகளில் 75 ரன்களும், மொயின் அலி 32 பந்துகளில் 50 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

பிறகு 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டிகாக் 40 ரன்களும், கடைசி நேரத்தில் பாண்டியா அதிரடியாக ஆடி 16 பந்தில் 37 ரன்களை அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். மலிங்கா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

malinga

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ரோஹித் கூறியதாவது : பாண்டியா சிறப்பாக விளையாடி வெற்றியை உறுதி செய்தார். அவர் ஐ.பி.எல் தொடங்கும் முன் தனது திறமையை நிரூபிக்க இந்த தொடரே சரியானது என்று நினைத்து விளையாடி வருகிறார். அவரின் இந்த ஆட்டத்தால் அணி வெற்றி பெற்றது அதேபோன்று அவருக்கும் இந்த போட்டி முக்கியமானது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங் தனது திறமையை தற்போது நிரூபிக்க வாய்ப்பு கிடைத்து நிரூபித்துள்ளார்.

Pandya

மலிங்கா எப்போதும் மும்பை அணிக்காக பல வருடங்களாக சிறப்பாக பந்துவீசி வருகிறார். அவரின் இடம் எப்போதும் மும்பை அணிக்கு முக்கியமானதே. எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசி பெங்களூரு அணியை சுருட்டினர். எப்போதும் மும்பை வான்கடே போட்டி எங்களுக்கு நெருக்கமான ஒன்றாகும்.

Advertisement